சேலம், ஜன. 13- ஏற்காடு மலைவாழ் மக்கள் பயன் பாட்டில் இருந்த சாலையை தனியாருக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் தாரைவார்த்து விட்டதா குற்றம்சாட்டியும், தமிழக முதல்வர் தலையிடக்கோரி சேலம் மாவட்டம் முழுவ தும் சிஐடியுவினர் ஒட்டிய சுவரொட்டி பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சிஐடியு நிர்வாகிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பந்தப்பட்ட பிரச்சனை குறித்து உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். சேலம் மாவட்டம் ஏற்காடு மார மங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 18 கிராம மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலையை 150 ஆண்டு களுக்கு மேலாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இம்மக்கள் பயன்படுத்தி வந்த சாலையை மக்களுக்கு எதிராக எஸ்டேட் முதலாளிகளுக்கு ஆதரவாக சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர், ஏற்காடு தாசில்தார், புத் தூர் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் துணை போவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை யடுத்து, சிஐடியு தொழிற்சங்கத்தினர் துண்டறிக்கை விநியோகித்தும், சுவரொட் டிகள் ஒட்டியும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். ஆட்சியருக்கு எதிராகவும், தமி ழக முதல்வர் தலையிட வலியுறுத்தியும் சேலம் மாவட்டம் முழுவதும் இந்த துண்ட றிக்கை, சுவரொட்டி ஒட்டப்பட்டதால் பரப ரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சிஐடியுவினர் கூறுகை யில், நீண்ட காலமாக இந்த பிரச்ச னை இருந்து வந்த நிலையில், சம்பந்த ப்பட்ட ஏற்காடு பகுதி மக்கள் போராடி வந்த னர். மக்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டிய மாவட்ட நிர்வாகம் தனியார் முதலா ளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது.
ஆகவே. மலைவாழ் மக்களின் உரிமை யை பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கத் துடன் இந்த இயக்கத்தை சிஐடியு சேலம் மாவட்ட தோட்ட தொழிலாளர் சங்கம் முன் னெடுத்துள்ளது. பரபரப்பு ஏற்படுத்திய சுவ ரொட்டி சம்பவத்தையடுத்து, சேலம் மாவட்ட ஆட்சியர், சிஐடியு மாவட்ட தலை வர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி னார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஏழாம் நம்பர் சாலை போட்டால் என்ன பிரச் சனை அதை ஆதரிக்கலாமே என்றார். இதற்கு சிஐடியு தலைவர்கள் ஆறாம் எண் சாலை அமைத்தால் தான் 18 கிராம மக்களும் பயன் பெறுவார்கள், அதனை மறுத்து சாலையிட் டால், இரண்டு கிராம் மக்கள் மட்டுமே பயன் பெறுவார்கள். இது சம்பந்தமாக நேரில் சிஐடியு களஆய்வு செய்து இருப்பதாகவும். அதனை. மாவட்ட நிர்வாகம் அமல்படுத்த வேண்டும் என்றோம். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரச்சினை மீது உரிய பரிசீலனை செய்யப்படும் என்கிற உறுதி யளித்தார். இப்பேச்சுவார்த்தையில், சிஐடியு மாவட்ட தலைவர் டி.உதயகுமார், மாவட்ட பொருளாளர் வீ. இளங்கோ மற்றும் சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத் தின் மாநில துணை தலைவர் எஸ்.கே. தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.