districts

img

சாதிவெறி குண்டர்களை கைது செய்: சிஐடியு மனு

கோவை, ஜன.8- மக்களைத் தேடி மருத்துவ திட்ட பணியாளரை தாக்கிய சாதி  வெறி குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிஐடியுவினர் கோவை  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த னர்.  மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள சேகுப்பட்டியில் மக்களை தேடி மருத்துவ திட்ட ஊழி யராக பணிபுரிந்து வரும் தன லட்சுமியை, சாதி ரீதியாக பேசி ஒரு கும்பல் கடுமையாக தாக்கியது. இதை தட்டிக்கேட்ட அவரது கணவர்  செந்தில் மீதும், அக்கும்பல் தாக்கு தலை நடத்தியுள்ளது. இச்சம்ப வத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சாதி வெறி பிடித்த குற்றவாளிகள் மீது  கடமையான நடவடிக்கை எடுக்க  வேண்டும் எனக் கோரியும் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு  கட்சிகள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து போராட்டங் களை நடத்தி வருகின்றனர். இதன்தொடர்ச்சியாக, மக்க ளைத் தேடி மருத்துவ திட்ட ஊழி யரை தாக்கிய, சாதிவெறி குண் டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சிஐடியு கோவை மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்று  ஆட்சியரிடம் மனு அளித்தனர்.