அவிநாசி, ஜூலை 30- திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் சாலை யோர வியாபாரிகளிடம் நிர்ணயித்த கட்ட ணத்தை விடக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப் படுவதைக் கண்டித்து அவிநாசி தாலுக்கா பொது தொழிலாளர் சங்கம் சிஐடியூ சார்பில் வெள்ளியன்று அவிநாசி பேரூராட்சி நிர்வா கத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். அவிநாசி பேரூராட்சி பகுதியில் நூற்றுக் கும் மேற்பட்ட சாலையோர வியாபாரக் கடை கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அவினாசி தாலுக்கா பொது தொழிலாளர் சி ஐ டி யு சங்கத்தினருக்குச் சாலையோர வியாபா ரிகளிடம் ஏலம் எடுத்த நபர்கள் கூடுதல் கட்ட ணம் வசூலிப்பதாகத் தகவல் கிடைத்துள் ளது. இதையடுத்து சி ஐ டி யூ பொது தொழி லாளர் சங்கத்தின் சார்பில் பேரூராட்சி நிர்வா கத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இம்மனுவில் குறிப்பிடுகையில் பேரூ ராட்சி நிர்வாகம் நிர்ணயித்த கட்டணம் தினசரி சாலையோர வியாபாரிகள் தள்ளுவண்டி ஒன்றுக்கு 5 ரூபாய் வசூல் செய்வதற்கு மாறாக பத்து முதல் 30 ரூபாய் வரை வசூல் செய்து வருகின்றனர். இதனால் வியாபா ரிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேரூராட்சி செயலாளர் கள் தெரிவிக்கையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஐந்து ரூபாய் கட்டணம் அச்சடிக்கப் பட்ட ரசீது வழங்கப்பட்டுள்ளது. இதனை மட் டும் செலுத்துமாறு தெரிவித்துள்ளனர், இதில் சங்கத்தின் தலைவர் அ.ராஜன், பொதுச் செயல் அலுவலர் அ.ஈஸ்வரமூர்த்தி, பொரு ளாளர் ஜி.சாம்ராஜ் சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் ரமேஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.