districts

img

தொழிற்சாலை சட்ட திருத்த மசோதாவிற்கு சிஐடியு எதிர்ப்பு

ஈரோடு, ஏப்.19- தமிழ்நாடு அரசின் தொழிற்சாலை சட்ட திருத்த மசோதாவை கண் டித்து ஈரோடு, கோவை ஆகிய இடங் களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தொழிற்சாலைகள் சட்டத்தில் பிரிவு 65 ஏ திருத்தமாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. இது தொழிலாளர்களின் உரிமை பறிக்கப்படுகிறது, வேலை நேரம் உள்ளிட்ட உரிமைகள் இச்சட் டத்தினால் பறிக்கப்படும் ஆபத்து உள் ளது. தொழிலாளர்களை சுரண்டுவ தற்கு தடையற்ற அதிகாரத்தை முத லாளிகளுக்கு வழங்கும் இச்சட்டத் திருத்தத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தி மாநிலம்  முழுவதும் சிஐ டியு கண்டன இயக்கத்தில் ஈடுபட்டு வருகிறது.  இதன்ஒருபகுதியாக, ஈரோடு சூரம் பட்டி நால் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட செய லாளர் எச்.ஸ்ரீராம் தலைமை வகித் தார். மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணி யன், பொது தொழிலாளர் சங்க எஸ். கிருஷ்ணன் மற்றும் அரசு போக்குவ ரத்து ஊழியர் சங்க ஈரோடு மண்டல பொதுச்செயலாளர் டி.ஜான்சன் கென் னடி ஆகியோர் உரையாற்றினர். இதில், திரளானோர் பங்கேற்றனர்.  கோவை கோவை, சிவானந்த காலனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிஐ டியு மாவட்ட தலைவர் கே.மனோ கரன், செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் உரை யாற்றினர். இதில், திரளானோர் பங் கேற்று, தமிழ்நாடு அரசின் நடவடிக் கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக் கங்களை எழுப்பினர்.