திருப்பூர், ஏப்.21- திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக் கான தொழிலாளர்களை திரட்டி ஏழு மையங் களில் மே தின பேரணியை சிறப்பாக கொண் டாட சிஐடியு மற்றும் ஏஐடியுசி சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். மே தின பேரணி நடத்துவது குறித்து, சிஐ டியு மாவட்ட தலைவர் சி.மூர்த்தி தலைமை யில் சிஐடியு அலுவலகத்தில் வெள்ளியன்று சிஐடியு, ஏஐடியுசி நிர்வாகிகள் கூட்டம் நடை பெற்றது. இதில் சிஐடியு சார்பில் மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ், பொருளாளர் ஜி. சம்பத், மாவட்ட நிர்வாகிகள் பி.முத்துசாமி, ஒய்.அன்பு, பி.பாலன், ராமலிங்கம் ஆகியோ ரும், ஏஐடியுசி சார்பில் செயலாளர் பி.ஆர். நடராஜன், மாவட்ட நிர்வாகிகள் என்.சேகர், சி.பழனிசாமி, ரவி, ஜெகநாதன் உள்ளிட் டோரும் பங்கேற்றனர். இதில், திருப்பூர் மாவட்டத்தில் உழைப் பாளர் உரிமைத் திருநாளான மே முதல் நாளை ஏழு மையங்களில் ஆயிரக்கணக்கான தொழி லாளர்களைத் திரட்டி மே தின பேரணியை எழுச்சியோடு நடத்துவது என முடிவு செய் யப்பட்டது. அதன்படி திருப்பூர் மாநகரில் சிஐடியு மாநில துணைப்பொதுச்செயலா ளர் எஸ்.கண்ணன், செ.முத்துக்கண்ணன், ஏஐ டியுசி சார்பில் முன்னாள் எம்எல்ஏ ந.பெரி யசாமி, பி.ஆர்.நடராஜன் ஆகியோர் பங்கேற் கின்றனர். உடுமலையில் சிஐடியு சார்பில் கே. காமராஜ், ஏஐடியுசி சார்பில் எம்.ரவி பங்கேற் கின்றனர். அவிநாசியில் சிஐடியு சார்பில் கே. ரங்கராஜ், ஏஐடியுசி சார்பில் மோகன், ஊத்து குளியில் சிஐடியுசி சார்பில் ஆர்.குமார், ஏஐடி யுசி சார்பில் எஸ்.செல்வராஜ், பல்லடத்தில் சிஐடியு எம்.ராஜகோபால், ஏஐடியுசி வி.ரவி, காங்கேயத்தில் சிஐடியு ஜி.சம்பத், எஐடியுசி இசாக் ஆகியோர் மே தின பேரணி பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகின்ற னர். இத்துடன் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஆங்காங்கே தொழிலாளர்கள் மே தினக் கொடியேற்றி உற்சாகமாக உரி மைத் திருநாளைக் கொண்டாடவும் சிஐடியு, ஏஐடியுசி முடிவு செய்துள்ளன.