திருப்பூர், ஜன.1- கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது போல அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக் கும், வீடு கட்ட ரூ.4 லட்சம் மாநியம் வழங்க வேண்டும் என சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தின் பேரவை வலியுறுத்தியுள்ளது. சிஐடியு ஊத்துக்குளி ஒன்றிய பொதுத் தொழிலாளர் சங்க ஆண்டு மகாசபை கூட்டம் திங்களன்று ஊத் துக்குளியில் நடைபெற்றது. சங்கத் தலைவர் கே.பெரியசாமி தலைமை வகித்தார். பொறுப்பு செயலாளர் கே.ஏ.சக்திவேல் வரவேற்புரையாற் றினார். பொருளாளர் ஆர்.மணியன் வரவு செலவு அறிக்கை வைத்தார். சிஐடியு மாவட்ட துணைச் செயலா ளர் ஜெ.கந்தசாமி துவக்க உரை யாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார் நிறைவுரை ஆற்றினார். மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி, விவசாய தொழிலாளர் சங்க தாலுக்கா செய லாளர் க.பிரகாஷ் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினார்கள். இதில், தமிழ்நாடு அமைப்புசாரா நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு பொங்கல் பரி சாக மூவாயிரம் ரூபாய் வழங்க வேண் டும். இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். கட்டுமான தொழி லாளர் போல வீடு கட்ட ரூ.4 லட்சம் மானியம் வழங்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. பேரவையில், சிஐடியு ஊத்துக் குளி ஒன்றிய பொதுத்தொழிலாளர் சங்கத்தின் தலைவராக கே.பெரிய சாமி, செயலாளராக வி.காமராஜ், பொருளாளராக ஆர்.மணியன், துணைத்தலைவராக எஸ்.சேகர், துணை செயலாளராக கே.ஏ.சக்தி வேல் உள்ளிட்ட 9 பேர் கொண்ட நிர் வாக குழு தேர்வு செய்யப்பட்டனர்.