கோவை, டிச.13- சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐ டியு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் எம்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கோரிக்கைகள் குறித்து, சங்கத் தின் பொதுச்செயலாளர் ஆர்.ராஜன் உரை யாற்றினார். இதில், தமிழகத்தில் 40 லட்சத் திற்கும் அதிகமான சுமைப்பணி தொழிலாளர் கள் பணியாற்றி வருகின்றனர். இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன் காக் கும் வகையில் சுமைப்பணி தொழிலாளர்க ளுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண் டும். டாஸ்மாக் குடோனில் பனிபுரியும் தொழி லாளர்கள் மற்றும் மளிகை மார்க்கெட்டில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இறக்கு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். பென் சன் பெறும் வயதை 55 ஆக குறைக்க வேண் டும். ரயில்வே கூட்செட்டில் தொழிலாளர்க ளுக்கு குடிநீர், குளியலறை, அடையாள அட்டை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி வேண்டும். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் கட்டப்படும் குடியிருப்புகளில் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு முன்னு ரிமை அடிப்படையில் வீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டது. இதில், சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.பீர்முகமது, சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி மற்றும் என்.செல்வராஜ் உள்ளிட்டோர் உரையாற் றினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சுமைப் பணி தொழிலாளர்கள் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.