districts

img

சிஐடியு இன்ஜினியரிங் சங்க மகா சபை

திருப்பூர், ஜூலை 10- திருப்பூரில் சிஐடியு இன்ஜினியரிங் சங்க 10 ஆவது மகா சபை கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது.  திருப்பூர் மாவட்ட இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கத்தின்  10ஆவது மகாசபை கூட்டம் ஞாயிறன்று பல்லகவுண்டன் பாளையத்தில் உள்ள  சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் கொடி யேற்றி துவக்கவுரை ஆற்றினார். இப்பேரவையில் புதிய நிர் வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின் மாவட்ட தலை வராக ஆர்.பழனிசாமி, மாவட்டச் செயலாளராக ஜெ.கந்த சாமி, பொருளாளராக வி.காமராஜ், துணைத் தலைவர்களாக கே.கண்ணையன், எஸ்.தேவராஜ், துணைச் செயலாளர்க ளாக எஸ். கே.சந்திரமூர்த்தி, ஆர்.சிவராஜ் ஆகியோர் தேர்வு  செய்யப்பட்டனர். மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ் நிறைவு  ஆற்றினார். இக்கூட்டத்தில் 75க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில், கமிட்டி உறுப்பினர் டேவிட் நன்றி  கூறினார்.