சேலம், ஜூலை 9- மின்வாரிய நிரந்தர ஊழியர் கள், கேங்மேன் மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளான காலிப்பணியிடத்தை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி சிஐ டியு மின்ஊழியர் மத்திய அமைப்பி னர் தமிழகம் முழுவதும் செவ்வா யன்று காத்திருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும். வேலைப்பளு ஒப்பந்தத்திற்கு எதிராக வெளி யிட்ட ‘ரீ டிபார்ட்மெண்ட்’ உத்தரவு களை திரும்பப்பெற வேண்டும். அரசாணை எண்:100 முத்தரப்பு ஒப் பந்தத்திலுள்ள அநீதிகளை கலைந்து, அரசு உத்தரவாதத்து டன் கூடிய புதிய ஒப்பந்தங்களை ஏற்படுத்த வேண்டும். மின்வாரி யத்தை பல கூறுகளாக பிரித்து தனியார் மயப்படுத்தும் நடவடிக் கைகளை நிறுத்த வேண்டும். அரசு ஊழியர் பெறுகின்ற ரூ.5 லட்சம் குடும்ப நலநிதி போன்று, மின்வா ரிய ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். மின்விபத்தில் உயிரிழக் கும் மின்வாரிய பணியாளர்க ளுக்கு சிறப்பு நிதி ரூ.10 லட்சம் அறிவித்ததற்கான அரசாணையை வாரியத்திற்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத் திய அமைப்பு (சிஐடியு) சார்பில், செவ்வாயன்று காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், உடையா பட்டி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, சங்கத்தின் தலை வர் பி.கருப்பண்ணன் தலைமை வகித்தார். இதில் சிஐடியு சேலம் மின் திட்டச் செயலாளர் வி.ரகுபதி, பொது கட்டுமான வட்டச் செயலா ளர் கி.வெங்கடேசன், திட்டப் பொரு ளாளர் கி.பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவை கோவையில் டாடாபாத் தமிழ் நாடு மின்சார வாரிய தலைமை பொறியாளர் அலுவலகத்தில் தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப் பின் சார்பில் நடைபெற்ற காத்தி ருப்பு போராட்டத்திற்கு, மாநகரத் தலைவர் வி.மதுசூதனன் தலைமை ஏற்றார். இதில், மண்டலச் செயலா ளர் டி. கோபாலகிருஷ்ணன், மாநில செயலாளர் டி.மணிகண்டன், தெற்கு கிளைத் தலைவர் பி.காளி முத்து செயலாளர் என்.ரத்னகுமார், வடக்கு கிளைச் செயலாளர் எம்.மணி கண்டன், தலைவர் எஸ்.சென்னி யப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். உதகை நீலகிரி மாவட்டம், உதகை பேருந்து நிலையம் அருகே தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு நீலகிரி கிளைத்தலைவர் ரவி சண்முகம் தலைமை வகித்தார்.. இதில், நிர்வா கிகள் சண்முகம், வேல்முருகன், ரமேஷ், சிஐடியு மாவட்டச் செயலா ளர் வினோத், பொருளாளர் நவீன் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் ஈரோடு மேற் பார்வை பொறியாளர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்திற்கு, ஈரோடு கிளைத் தலைவர் எம்.ஆர். பெரியசாமி தலைமை வகித்தார். மண்டலச் செயலாளர் சி.ஜோதிமணி போராட்டத்தைத் தொடங்கி வைத் தார். மாநில துணைத் தலைவர் பி. ஸ்ரீதேவி கோரிக்கைகளை விளக்கி பேசினார். சகோதர சங்க நிர்வாகி கள் வாழ்த்திப் பேசினர். திருப்பூர் பிஎன் சாலையில் உள்ள மேற் பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற காத்திருப்பு போராட் டத்திற்கு திருப்பூர் வட்டப் பொருளா ளர் கே.மோகன்ராஜ் தலைமை ஏற் றார். இதில், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் கே. உன்னி கிருஷ்ணன், செயற்குழு உறுப்பி னர் பி.பாலன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் நாகராஜ், திருப்பூர் கோட் டச் செயலாளர் சக்திவேல், அவி நாசி கோட்டச் செயலாளர் ஜஸ்டின் திரவியம், மத்திய அலுவலகம் மார்க்ஸ் உட்பட திரளானோர் பங் கேற்றனர். இதேபோன்று உடுமலை மேற் பார்வை பொறியாளர் அலுவலகத் தின் முன்பு சிஐடியு தொழிற்சங்கத் தினர் தொடர் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். உடுமலை சிஐ டியு திட்ட துணைத்தலைவர் எம். கிருஷ்ணகுமார் தலைமை ஏற்றார். சிஐடியு திருப்பூர் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஜெகதீசன் துவக் கிவைத்து பேசினார். இதில், மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர் வாகிகள் எஸ்.ஜெகானந்தா, ஆர். கோவிந்தன், பொருளாளர் ஆர்.கோவிந்தன் மற்றும் ஓய்வு பெற் றோர் நல அமைப்பின் நிர்வாகி கள் கே. திருநாவுக்கரசு, ஆர். பால சுப்பிரமணியம் உள்ளிட்டோர் உரையாற்றினர்.