சேலம், செப்.1- தமிழக அரசு அறிவித்த ஜவுளி பூங்காவை, சேலம் நூற்பாலை வளா கத்தில் துவங்க வலியுறுத்தி வியாழ னன்று சேலம் மாவட்ட ஆட்சியர் முன்பு சிஐடியு பஞ்சாலை தொழி லாளர் சங்கத்தினர் கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகரம்,அம்மா பேட்டை பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான கூட்டுறவு நூற்பாலை 40 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு அதிகாரி களின் அலட்சியத்தால் 18 ஆண்டு களாக நூற்பாலை மூடப்பட்டுள்ளது. 1500 க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் பணியாற்றிய இந்த நூற் பாலையில், தற்போது 222 நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்று கின்றனர்.
இத்தொழிலாளர்களுக்கு இதுவரை எந்த ஒரு பண பலன் களும் அரசு நிர்வாகம் வழங்க வில்லை. இப்பிரச்சனை குறித்து ஏழு வழக்குகள் நடத்தப்பட்டுள்ளது. இதில், உச்ச நீதிமன்றம் ரூ.1.50 கோடியை தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென தீர்ப்பு வழங்கியது. மேலும் வருங் கால வைப்பு நிதி மூலம் 1.50 கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பையும் இதுவரை அமல்படுத்த வில்லை. கைத்தறி நூல் தேவைக்காக தொழிலாளர்களாலும், சுதந்திரப் போராட்ட வீரர்களாலும் உருவாக் கப்பட்ட சேலம் கூட்டுறவு நூற்பாலை தொடர்ந்து அரசு இயக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள தொழில் பூங்கா வை கூட்டுறவு நூற்பாலை வளா கத்திலே துவங்க வேண்டும். தற் போதுள்ள 222 தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பை உத்த ரவாதப்படுத்த வேண்டும் என வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக, ஆர்ப்பாட்டத்திற்கு பஞ்சாலை சங்கத்தின் செயலாளர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். இதில் சிஐடியு சேலம் மாவட்ட செய லாளர் டி.உதயகுமார், பணி இழந்த பஞ்சாலைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட திராளானோர் கலந்து கொண்டனர்.