சேலம், அக்.10- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழ கத்தில் ஒப்பந்த முறையில் பணியாளர் களை நியமிக்க கூடாது. உரிய முறை யில் தொழிலாளர்களை தேர்வு செய்து, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண் டும். 15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்க ளுக்கு வழங்க வேண்டிய பணப்பலன் களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் போக்குவரத்து தலைமை அலுவ லகம், மெய்யனூர், அஸ்தம்பட்டி, ஜான் சன் பேட்டை, ஆத்தூர், மேட்டூர், சங்ககிரி, தாரமங்கலம், நாமக்கல், ராசிபுரம், தம் மம்பட்டி வாழப்பாடி உள்ளிட்ட 18 போக் குவரத்து பணிமனைகள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு விரைவு போக்குவ ரத்து தொழிற்சங்க மாநில துணை பொதுச் செயலாளர் என்.முருகேசன், சாலைப் போக்குவரத்து சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன், சிஐ டியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மண்டல பொதுச்செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, மண்டலத் தலைவர் செம்பன், பொருளாளர் சேகர், துணை பொதுச் செயலாளர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.