districts

img

“போதையில்லா தமிழகம்” - சிஐடியு விழிப்புணர்வு மினி மாரத்தான்

சேலம், ஜூன் 18- “போதையில்லா தமிழகம்” என்கிற முழக் கத்தை முன்வைத்து சிஐடியு சேலம் ரயில்வே  ஏற்றுமதி இறக்குமதி தொழிலாளர் சங்கம் சார்பில் விழிப்புணர்வு மாராத்தான் போட்டி நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.  சிஐடியு சேலம் ரயில்வே ஏற்றுமதி இறக்கு மதி தொழிலாளர் சங்கம் துவங்கப்பட்டு 50 ஆண்டுகள் நடைபெறுகிறது. இதனிடையே 50 ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதி யாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற் படுத்தும் வகையில், “போதையில்லா தமிழ கம்” என்ற தலைப்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. பால் மார்க்கெட் பகுதியில் உள்ள ரயில்வே கூட்செட் வளாகத்தில் மாரத் தான் போட்டி நடைபெற்றது. சங்கத்தின் தலை வர் ஆர். வெங்கடபதி தலைமை ஏற்றார். மாரத்தான் போட்டியை செவ்வாய்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் தமிழ்மணி கொடி  அசைத்து துவக்கி வைத்தார். மாரத்தான் போட்டி ரயில்வே கூட்செட் வளாகத்தில் இருந்து பள்ளப்பட்டி வழியாக 3 ரோடு  சென்று அங்கிருந்து மீண்டும் அதே வழியாக ரயில்வே கூட் செட் வந்தடைந்தது. ஆண்கள், பெண்கள் என தனித்தனியே  போட்டிகள் துவக்கப்பட்டு மாரத்தான் போட்டி ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது. போட்டியில் முதலாவதாக நபில், இரண்டா வது இடத்தை எம்.ரஞ்சித் குமார், மூன்றாவது இடத்தை எம்.தங்கதுரை, நான்காவது இடத்தை கே. லட்சுமணன் ஆகியோரும் பிடித் தனர். பெண்கள் பிரிவில் முதலாவது இடத்தை கே.ராஜேஸ்வரி, இரண்டாவது இடத்தை எம்.கௌரி, மூன்றாவது இடத்தை எஸ்.வைத்தீஸ்வரி, நான்காவது இடத்தை ஐஸ்வர்யா ஆகியோரும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு, கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட் டன. இந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில், ரயில்வே பார்வர்டிங் ஏஜென்சீஸ் விசுவநாதன், கோபி,  சேகர், செல்வம்,ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் சிஐடியு சாலை போக்குவரத்து மாநிலத் துணைத் தலைவர் எஸ்.கே.தியாக ராஜன், மாவட்ட செயலாளர் ஏ.கோவிந்தன்,  மாவட்ட பொருளாளர் வி.இளங்கோ, மாவட்ட துணைத்தலைவர் பி.பன்னீர்செல்வம் மற் றும் சிஐடியு ரயில்வே ஏற்றுமதி இறக்குமதி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.