சேலம், ஜன.10- சிஐடியு அகில இந்திய 17 வது மாநாடு ஜனவரி 18-22 ஆம்தேதி வரை பெங்களூருவில் நடைபெறும் மாநாட்டு பிரச்சாரம் சேலத்தில் செவ் வாயன்று நடைபெற்றது. சிஐடியு அகில இந்திய மாநாட்டு நோக்கங்களை தொழிலாளர்கள், பொது மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் சிஐடியு அகில இந்திய முடிவின்படி நாடு முழு வதும் செங்கொடி கொடியேற்றும் நிகழ்ச்சி செவ்வாயன்று நடை பெற்றது. அதன் ஒரு பகுதியாக சேலம் ரயில்வே ஏற்றுமதி இறக்குமதி தொழி லாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் சேலம் மார்க்கெட் கூட்செட் கேட் முன்பு சங்கத்தின் பொருளாளர் பி. சக்திவேல் தலைமையில் சங்கத் தின் தலைவரும், சுமைப்பணி சம்மேளன மாநில தலைவருமான ஆர்.வெங்கடபதி கொடியேற்றி வைத்து மாநாட்டின் நோக்கங்களை விளக்கி சிறப்புரையாற்றினார். இதில், சிஐடியு நிர்வாகிகள் எஸ்.பிரபு, பி.மதியழகன், மாரிமுத்து, கோவிந்தராஜ் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். இதே போல், சேலம் அரியா கவுண்டம்பட்டி வேர் ஹவுஸ் சேலம் உருக்காலை சேலம் ஆட்டோ தொழிற்சங்கம் ஜங்ஷன் மேட்டூர் சுமை சங்கம் உள்ளிட்ட இடங்களில் 17வது அகில இந்திய மாநாட்டு பிரச் சாரம் மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திர ளானோர் பங்கேற்றனர்.