districts

img

மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் ரயில் மறியல்

கோவை, செப்.26- ஒண்டிப்புதூர் பகுதி யில் ரயில்வே கிராசிங்கில்  மேம்பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி  அப்பகுதி பொதுமக்கள் ரயில் மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், ஒண்டிப்புதூர் மற்றும் சூர்யா  நகரை இணைக்கும் ராமச் சந்திரா சாலையில் ரயில்வே  கேட் உள்ளது. இதனிடையே  சூர்யா நகரிலிருந்து பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்பவர்கள் ரயில்வே கேட்டை கடந்துதான் சென்று வரு கின்றனர். ஆனால், பெரும்பாலன நேரங் களில் ரயில்வே கேட் அடைக்கப்படுவதால் மாணவர்கள் முதல் வேலைக்கு செல்வோர் வரை அனைத்து தரப்பினரும் பல்வேறு இன்னலுக்குள்ளாகி வருகின்றனர். ரயில்வே  கேட் மூடப்பட்டால் 4 கிலோமீட்டர் தூரம்  சுற்றியே நகரின் முக்கிய பகுதிகளுக்கு  செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.  எனவே, உடனடியாக ரயில்வே மேம் பாலம் அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி சிவலிங்கபுரம், சூரியா நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் பலமுறை அதிகாரிகளிடம் மனு  அளித்தனர். ஆனால், கோரிக்கை மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதால் அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனி டையே சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம் பாலம் அமைக்க சுமார் ரூ.26 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், இன்னும் பாலம் கட்டுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி  பொதுமக்கள் செவ்வாயன்று கருப்புக் கொடியுடன், ரயில்வே கேட் பகுதியில்  அமர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். அப்போது, ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டும், அதற் கான பணிகளை துவங்காத அதிகாரிகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும், மேம்பாலம் அமைக்கப்படுவதற்கு முன்பு ரயில்வே கேட்டை மூடும் முடிவிற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இப் போராட்டத்தில், சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் வீ.தெய்வேந்திரன், சூர்யா  நகர் குடியிருப்பு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட  500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கைதா கினர்.