districts

img

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மறியல்

தருமபுரி, மார்ச் 19- காரிமங்கலம் அருகே குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடு பட்டனர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றி யத்திற்குட்பட்டது பெரியாம்பட்டி ஊராட்சி.  இந்த ஊராட்சியில் காமராஜ் நகர், பெரி யாம்பட்டி, புலுக்குறிச்சி, ஜொல்லம்பட்டி, காசிகொல்லன்பட்டி உட்பட 20க்கும் மேற் பட்ட கிராமங்கள் உள்ளன. இந்நிலையில், காமராஜ் நகர், பெரியார் நகர், புல்லுகுறிச்சி  ஆகிய கிராமங்களில் மாதம் ஒரு முறை தான் ஒகேனக்கல் குடிநீர் வருகிறது. ஊராட் சியின் மூலம் வழங்கப்படும் தண்ணீர்  வருவதில்லை. குடிநீர் இல்லாமல் இங்குள்ள  மக்கள் நீரை விலைகொடுத்து வாங்கும்  நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிலர்  விவசாய கிணறுகளுக்கு சென்று குடிநீர்  எடுத்து வருகின்றனர். இதுகுறித்து  ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் முறை யிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி பெண்கள் குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பெரியாம்பட்டி, தருமபுரி -  கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை அமர்ந்து மறி யலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பேச்சு வார்த்தை மேற்கொண்டு, குடிநீர் கிடைக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தனர். அதனடிப்படையில் பெண்கள் மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர்.