அவிநாசி, நவ.7- பெருமாநல்லூர் ஊராட் சிக்கு உள்பட்ட பொது மயா னத்தை அளவீடு செய்து தராத தைக் கண்டித்து, பொதுமக் கள் திங்கள்கிழமை திடீர் சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். திருப்பூர் ஒன்றியம், பெரு மாநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் மாயானம் பெருமாநல்லூர் திருப்பூர் சாலையில் உள்ளது. இம்மாயா னத்தில் ஆக்கிரமிப்பு உள்ளதால் பொதுமக் கள் பெரும் பாதிக்குள்ளாகி வந்தனர். இது குறித்து மக்கள் கோரிக்கை விடுத்ததைய டுத்து ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தா மணி, சிடிசி வேலுச்சாமி உள்ளிட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் மயானத்தை அளவீடு செய்து தரக் கோரி வருவாய்த்துறையி னரிடம் மனு அளித்தனர். பல முறை கோரிக்கை விடுத்தும் அளவீடு செய்து தராத தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பெருமா நல்லூர், திருப்பூர் சாலையில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பெருமாநல்லூர் போலீஸார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கலைந்து செல்வதாகக் கூறினர். இதைத்தொடர்ந்து, மயானப் பகுதிக்கு சென்ற வருவாய்த்துறையினர் அளவீடு செய்ய முற்பட்டதால், பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.