கோவை, மே 22 – பஞ்சு மற்றும் நூல் விலை கடுமையாக உயர்ந்திருப்பதன் காரணமாக நிலைமை சீராகும் வரையில் சிறு நுற்பாலைகள் கால வரையற்ற உற்பத்தி நிறுத்தம் மேற்கொள்ள உள்ளதாக சிஸ்பா அறிவித்துள்ளது. ஒன்றிய பாஜக அரசு கார்ப்ரேட் நலனை முன்னிருத்தி செயல்படுகிறது. இதன் கார ணமாக நாடு முழுவதும் உள்ள சிறு,குறு தொழில்கள், விவசாயம் அனைத்தும் பெரும் நெருக்கடியில் உள்ளது. இதே போல ஜவுளித்துறையும் பெரும் நெருக் கடியை எதிர்கொண்டு வருகிறது. பஞ்சு மற்றும் நூல் உயர்வு காரணமாக கடந்த வாரத்தில் திருப்பூர், ஈரோடு மாவட்டங் களை சார்ந்த ஆயத்த ஆடை மற்றும் ஜவுளித்துறையினர் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட னர். நூறு சதவீத முழு வேலை நிறுத்தம் நடைபெற்றும் ஒன்றிய அரசின் நடவடிக்கை யில் எவ்வித முன்னேற்றமும் ஏற்பட வில்லை. ஜவுளித்துறைக்கு முக்கிய மூலப் பொருட்களான பஞ்சு மற்றும் நூல் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால், உற் பத்தி செய்ய முடியாத நிலைக்கு சென்றுள் ளனர். இதனை நம்பியுள்ள லட்சக்கணக் கான தொழிலாளர்களும் வேலை மற்றும் வருவாய் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், சிறு நுற்பாலைகளும் காலவரையற்ற உற்பத்தி நிறுத்த போராட் டத்தை அறிவித்துள்ளனர். இதுகுறித்து, சௌத்இந்திய ஸ்பின்னர் அசோசியேசன் (சிஸ்பா) தலைவர் செல்வம் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் கடந்த ஐந்து மாதங்களாக வரலாறு காணாத பஞ்சு விலை உயர்வை சிறு நூற்பாலைகள் சந்தித்து வருகிறது. கடந்த ஜனவரி 2022 இல் 356 கிலோ கொண்ட ஒரு கண்டியின் விலை ரூ.75 ஆயிரமாக இருந்தது. தற்போது, படிப்படி யாக உயர்ந்து இன்றைய நாளில், பஞ்சின் விலை சராசரியாக ரூ. 1 லட்சத்து 15 ஆயிரமாக உள்ளது.
அதேபோல், ஜனவரி 2022 இல் ஒரு கிலோ நூலின் விலை ரூ.328 ஆக இருந்தது. இன்றைக்கு ஒரு கிலோ நூலின் விலை ரூ. 399 ஆக உள்ளது. இதனை கணக்கிடும் போது, சிறு நூற் பாலைகளுக்கு ஒரு கிலோவிற்கு ரூ.50 முதல் ரூ.60 வரை நஷ்டம் ஏற்படுகிறது. அபரிமிதமான பஞ்சு விலை உயர்வுக்கு, இவ்வாண்டு மிகவும் குறைந்த பருத்தி உற்பத்தியே காரணம். நமது நாட்டின் பருத்தி உற்பத்தியின் விளைச்சலை துள்ளி யமான அளவிடுவதற்கு அரசாங்கத்தி டமோ, தனியாரிடமோ எவ்வித சரியான புள்ளி விவரங்கள் இல்லை. பருத்தி சீசன் ஆரம்பித்தவுடன், பெரிய பஞ்சு வியாபா ரிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் அதிக அளவில் பஞ்சை கொள்முதல் செய்து இருப்பு வைத்துக் கொண்டார்கள். மேலும், வெளிநாட்டிற்கும் பஞ்சு ஏற்று மதி செய்யப்பட்டுள்ளது. பஞ்சு விலை கடு மையாக உயர்ந்து விட்டதால், எங்களது உறுப்பினர்களிடம் பஞ்சு கொள்முதல் செய்வதற்கு நடப்பு மூலதனத்தில் பற்றாக் குறை ஏற்பட்டு, பஞ்சை கொள்முதல் செய்ய முடியவில்லை. பல சிறு நூற்பாலைகள் தங்களது நடப்பு மூலதனம் முற்றிலும் கரைந்து உள்ளது. இந்த அசாதாரண சூழ்நிலையில், எங்களது சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இனி பஞ்சு கொள்முதல் செய்வதில்லை என்றும், பஞ்சு மற்றும் நூல் விற்பனை விலை சீராகும் வரை ஆலை களை இயக்குவதில்லை என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஜவுளித்துறையினரும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவிப்பு செய்துள்ளனர்.