தருமபுரி, ஜூலை 9- பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் சிதலம டைந்து குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை உடனடி யாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்திற்குப்பட்ட என்னஅள்ளியிலிருந்து மூங்கப்பட்டி, ரெட்டியூர், சமத்துவ புரம், வி.செட்டிஏரிபள்ளம் வரை சுமார் 3 கி.மீ தூரம் கொண்ட கிராம தார்ச்சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தினந்தோறும் பல்வேறு வேலைகளுக்காக பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் என இச் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை சந்தைப்படுத்தவும் இந்த வழியை பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். குண்டும், குழியு மாக உள்ள இச்சாலையால் வாகனங்கள் பழுதடைகின்றன. மழை பெய்யும் சமயத்தில், இச்சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. அப்போது இருசக்கர வாகனங்களில் செல் வோர்கூட மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.