தருமபுரி, ஏப்.7- சிப்காட் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தருமபுரி தொகுதி திமுக வேட்பா ளர் ஆ.மணி உறுதியளித்துள்ளார். தருமபுரி நாடாளுமன்ற தொகு தியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.மணி, நல்லம்பள்ளி ஒன்றியத் திற்குட்பட்ட பகுதிகளில் வாக்குசே கரிப்பில் ஈடுபட்டார். தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலா ளர் தடங்கம் பெ.சுப்பிரமணி தலை மையில், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஏ.எஸ்.சண்மு கம் ஏற்பாட்டில் நடைபெற்றது. அப் போது, வேட்பாளர் ஆ.மணி பேசு கையில், தருமபுரி மாவட்டத்தில் வேலை இல்லாமல் வெளிமாவட் டங்களுக்கும், வெளிமாநிலங்க ளுக்கும் இளைஞர்கள் வேலைக்கு செல்கின்றனர். இதனை தடுக்க தருமபுரி, தடங்கம் பகுதியில் சிப் காட் பணிகளை விரைந்து முடித்து உள்ளூரிலேயே வேலை வழங்க நட வடிக்கை எடுக்கப்படும். ஒகேனக் கல் கூட்டுக்குடிநீர் திட்ட இரண் டாம் கட்டப்பணிகளை முடித்து, அனைத்து கிராமங்களுக்கும் குடி நீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்ப டும். மகளிர் சுய உதவிக்குழுக்க ளுக்கும், மாணவர்களின் கல்விக் காக வட்டியில்லா கடன் வழங்க நட வடிக்கை எடுக்கப்படும், என்றார். இந்நிகழ்வில், திமுக மாவட்ட துணைச்செயலாளர் ரேணுகா தேவி, சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் சங்கர், இளைஞ ரணி அமைப்பாளர் வெங்கடேசன், ஊராட்சி மன்றத் தலைவர் கலைச் செல்வன், மாணவரணி அமைப்பா ளர் பெரியண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ்.எஸ்.சின்னராஜ், விசிக மைய மாவட்டச் செயலாளர் த.கு.பாண்டியன், ஒன்றியச் செய லாளர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.