கோவை, பிப்.18- பெரியநாயக்கன்பாளையத்தில் நாடாளு மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டி முடிக்கப்பட்ட சிறுவர் பூங்கா மற்றும் தரை மட்ட நீர்த்தேக்க தொட்டியினை பி.ஆர்.நடரா ஜன் எம்.பி., திறந்து வைத்தார். கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பா ளையம் பகுதியில் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டி முடிக்கப்பட்ட சிறு வர் பூங்கா திறப்பு விழா ஞாயிறன்று நடை பெற்றது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். பெரியநாயக்கன்பாளை யம், ஜெயா நகர் பகுதியில் நடைபெற்ற சிறு வர் பூங்கா திறப்பு விழா நிகழ்ச்சிக்கு பேரூ ராட்சி மன்றத் தலைவர் வெ.விஷ்வ பிர காஷ் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற 8 ஆவது வார்டு உறுப்பினர் என்.சிவராஜன் வரவேற்றார். அப்போது பி.ஆர்.நடராஜன் எம்.பி., பேசுகையில், கல்வி மற்றும் மகளிர் முன்னேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தமிழ் நாடு அரசு முன்னெடுத்து வருகிறது. அரசின் மக்கள் நலத்திட்ட நடவடிக்கைகளை பலப்ப டுத்திட பொதுமக்கள் ஆதரவு வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதைத்தொ டர்ந்து சிறு, குறு தொழில் முனைவோர்களை சந்தித்து பி.ஆர் நடராஜன் கலந்துரையாடி னார். இதில் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஜய்கு மார், ஒன்றியச் செயலாளர் மோகன்ராஜ், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நிர்வா கிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து பெரியநாயக்கன்பா ளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட குருடம்பா ளையம், திருமலா அவென்யூ பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு நிதியில் கட்டி முடிக்கப்பட்ட ஒரு லட் சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரை மட்ட நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் எஸ்.கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. நீர்த்தேக்க தொட்டிக்கான கல்வெட்டினை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் குருடம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் பி.வி.மணி, காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் மோகன் ராஜ், திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் சர வணகுமார், காங்கிரஸ் கட்சி நிர்வாகி சுரேஷ், விசிக நிர்வாகி ராகவன், வார்டு உறுப்பினர் அருள்ராஜ், சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் கோகுல், கனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.