districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

தாராபுரம் ஜமாபந்தி

தாராபுரம், மே 28- தாராபுரம் ஜமாபந்தி யில் 308 பேர் மனு அளித் தனர்.  தாராபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், கோட்டாசியர் குமரேசன்  தலைமையில் கன்னிவாடி,  தாராபுரம், மூலனூர், அலங் கியம் உள்ளிட்ட வருவாய்  கிராமங்களுக்கான ஜமா பந்தி நடைபெற்றது. இந்த  நிகழ்வில் கல்வி உதவித் தொகை, இலவச வீட்டு  மனை பட்டா உள்ளிட்ட  கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 308 பேர் மனு அளித்தனர்.  இந்த நிகழ்ச்சியில், தாரா புரம் வட்டாட்சியர் ஜெக ஜோதி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பர மேஷ், மண்டல துணை வட் டாட்சியர் மகேஸ்வரி,  வட்டார வழங்கல் அலுவலர்  செந்தில் பிரபு, வருவாய்  ஆய்வாளர் சரவணன்ஆகி யோர் கலந்து கொண்டனர்.

சிக்கண்ணா அரசு கல்லூரியில்  மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

திருப்பூர், மே 28 - திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்  கல்லூரியில் 2023-2024 ஆம் கல்வி யாண்டிற்கான இளநிலைப் பட்ட வகுப்புகள் மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்டக் கலந்தாய்வு மே 31 முதல்  தொடங்கி ஜூன் 6 ஆம் தேதி வரை நடை பெற உள்ளது.  சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை புதனன்று காலை  9.30 மணியளவில் தொடங்கி நடை பெறும். இந்தச் சிறப்புப் பிரிவினர் உரிய  மூலச் சான்றிதழ்களுடன் வர வேண்டும்.  பி.காம் பாடப் பிரிவிற்கான கலந் தாய்வு ஜூன் 1 (வியாழனன்று) காலை 9.30 மணிக்கும், பி.காம் சிஏ பாடப் பிரி விற்கு காலை 11.30 மணிக்கும், பி.காம்  ஐபி பாடப் பிரிவிற்கு மதியம் 2 மணிக்கும்  நடைபெறும். ஜூன் 2 (வெள்ளியன்று)  காலை 9.30 மணிக்கு பிபிஏ பாடப்  பிரிவிற்கும், காலை 11.30 மணிக்கு பொருளியல் பாடப் பிரிவிற்கும், நண் பகல் 12.30 மணிக்கு வரலாறு பாடப் பிரிவிற்கும் கலந்தாய்வு நடைபெறும்.  அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு ஜூன் 3 (சனியன்று) காலை 9.30 மணிக்கு இயற்பியல் பாடப் பிரி விற்கும், காலை 11.30 மணிக்கு வேதி யியல் பாடப் பிரிவிற்கும், பிற்பகல் 2  மணிக்கு விலங்கியல் பாடப் பிரிவிற்கும்  கலந்தாய்வு நடைபெறும்.

 ஜூன் 5 (திங்களன்று) காலை 9.30 மணிக்கு கணிதப் பாடப் பிரிவிற்கும், 10.30 மணிக்கு ஆடை வடிவமைப்பு நாகரிகம் பாடப் பிரிவிற்கும், நண்பகல்  11.30 மணிக்கு கணினி அறிவியல் பாடப்  பிரிவிற்கும், பிற்பகல் 2 மணிக்கு கணினி  பயன் பாட்டியல் பாடப் பிரிவிற்கும் கலந்தாய்வு நடைபெறும்.  ஜூன் 6 (செவ்வாயன்று) காலை 9.30  மணிக்கு தமிழ் இலக்கியம் பாடப் பிரி விற்கும், நண்பகல் 11.30 மணிக்கு ஆங்கில இலக்கியம் பாடப் பிரி விற்கும் கலந்தாய்வு நடைபெறும். கலந் தாய்வில் பங்கேற்க, கல்லூரிக்கு வரு வோர் கட்டாயம் பெற்றோருடன் வருதல் வேண்டும். ஆன்லைனில் விண் ணப்பித்து, பதிவிறக்கம் செய்த விண் ணப்பத்தை கட்டாயம் கொண்டு வர  வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண்  சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதி  சான்றிதழ், சேமிப்பு வங்கிக் கணக்கு  புத்தகத்தின் முதல் பக்கம் ஆகிய வற்றின் இரண்டு நகல்கள் மற்றும் அசல்  சான்றிதழ்கள் கொண்டுவர வேண்டும். பாஸ்போர்ட் அளவிலான ஆறு நிழற் படங்கள் மற்றும் கல்லூரிக்குச் செலுத்த  வேண்டிய கட்டணத் தொகையுடன் கலந்தாய்வில் பங்கேற்கலாம். கல் லூரிக்குச் செலுத்த வேண்டிய தொகை யுடன் அசல் மாற்றுச் சான்றிதழ், சாதிச்  சான்றிதழ் இல்லாமல் இருப்பின் மாண வர்கள் கலந்தாய்வில் பங்கேற்க இய லாது. உரிய நேரத்தில் கலந்தாய்வில் பங்கேற்காமல் தாமதமாக வந்தால்  அந்த நேரத்தில் பாடப் பிரிவுகளில்  இருக்கும் இடங்களின் அடிப்படையி லேயே தகுதியுள்ள பிரிவுகளில் சேர்க்கை நடைபெறும் என கல்லூரி  முதல்வர் வ.கிருஷ்ணன் தெரிவித்தார்.

உதகை குதிரை பந்தயம் நிறைவு

உதகை, மே 28- உதகையில் கோடை சீசனையொட்டி நடைபெற்று வந்த பிரசித்தி பெற்ற குதிரை பந்தயம் நிறைவு பெற்றது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங் களில் கோடை சீசன் நடைபெறுகிறது. அப்போது வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். இவர்களை மகிழ்விக்க கோடை விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கோடை விழாவையொட்டி கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, ஊட்டியில் மலர் மற்றும் ரோஜா கண்காட்சி, குன்னூரில் பழக்கண்காட்சி  கியவை நடைபெற்றது. கோடை சீசனின் முக்கிய நிகழ் வான குதிரை பந்தயம், மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் உத கையில் நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் ஏப்.14 ஆம் தேதி யன்று குதிரை பந்தயம் தொடங்கும். ஆனால், கடந்தாண்டு மழை காரணமாக பல்வேறு போட்டிகள் ரத்தானதால், இந்த  ஆண்டுக்கான பந்தயம் முன்னதாகவே ஏப்.1 ஆம் தேதி யன்றே தொடங்கியது. தி நீல்கிரிஸ் 1000 மற்றும் 2000 கீன்னீஸ் உள்ளிட்ட பந்தயங்கள் மற்றும் முக்கிய பந்தயங்களில் ஒன் றான “தி நீல்கிரிஸ் டெர்பி ஸ்டேக்ஸ்” கிரேட்-1 குதிரை பந்தயம் நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து கடைசி குதிரை பந்தயபோட்டியில், குளோரியஸ் கிரேஸ் முதலிடம் பிடித்தது. இதன்பின் ஜாக்கி உமேஷ் மற்றும் பயிற்சியாளர் செபஸ்டின் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டன. முன்னதாக, திரளான சுற்றுலா பயணி கள் மற்றும் உள்ளூர்வாசிகள் கலந்து கொண்டு குதிரை பந்தயத்தை கண்டு ரசித்தனர். மேலும், நேரில் வர முடியா தவர்கள் இணையதளம் மூலம் பந்தயத்தை பார்த்தனர். பந்தயம் நிறைவு பெற்றதால் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட குதிரைகள் வாகனங்கள் மூலம் மீண்டும் அங்கேயே கொண்டு செல்லப்படுகிறது.

திம்பத்தில் அதிரடிப்படை முகாம் திறப்பு


ஈரோடு, மே 28- ஈரோடு மாவட்டத்தில் 2 ஆவதாக திம்பம் பகுதியில் காவல் துறையின் அதிரடிப்படை முகாம் திறக்கப்பட்டுள் ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள குய்ய னூர் வனப்பகுதியில் ஏற்கனவே அதிரடிப்படை முகாம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பகுதியில் 2 ஆவதாக சிறப்பு இலக்கு படை (அதிரடிப்படை) முகாம் அமைக்கப்பட்டுள் ளது. இந்த அதிரடிப்படை முகாமை காவல் துறை இயக்கு நர் சைலேந்திரபாபு ஞாயிறன்று காலை காணொளி காட்சி  மூலம் திறந்து வைத்தார். திம்பம் அதிரடிப்படை முகாம்  அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு இலக்கு படை காவல்துறை தலைவர் முருகன், இலக்கு படை காவல் கண்காணிப்பாளர் ராஜன், இலக்கு படை சிறப்பு காவல் கண் காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் இலக்கு படை போலீசார் பலர் கலந்து கொண்டனர். திம்பம் சிறப்பு இலக்கு படையில், இலக்கு படை ஆய்வாளர் ரங்க ராஜ் தலைமையில் 30 பேர் கொண்ட போலீசார் இடம் பெற் றுள்ளனர். இக்குழு திம்பம் மற்றும் அதன் சுற்று வட்டார  பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபடும் என காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளுக்கு சாகச பயிற்சி

உதகை, மே 28- வெலிங்கடன் ராணுவ முகாமில் குழந்தைகளுக்கு கோடை கால சாகச பயற்சி அளிக்கப்பட்டு வருகிறது. குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரி மற்றும் எம்ஆர்சி ராணுவ முகாம் ஆகியவை உள் ளன. இங்குள்ள அதிகாரிகளுக்கும், வீரர்களுக்கும் ராணுவ பயிற்சி மட்டுமின்றி குதிரை ஏற்ற பயிற்சி உட்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வெலிங்டன் ராணுவ முகாமில் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென் டரல் தென் பிராந்திய குழந்தைகளுக்கான 10 நாட்கள் கோடை கால சாகச பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. கடந்த மே 21 ஆம் தேதியன்று தொடங்கிய இம்முகாம் மே 30 ஆம் தேதியன்று வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் மொத்தம் 110 குழந்தைகள் கலந்து கொண்டு மலையேறுதல் உட்பட பல் வேறு சாகச பயிற்சிகளில் பங்கேற்கின்றனர். இதில் குதிரை சவாரி, ஏர் ரைபிள் மற்றும் பிஸ்டல் ஷூட்டிங், டிரெக்கிங்,  படகு சவாரி, உடற்பயிற்சி போன்ற பயிற்சி அளிக்கப்படு கிறது. இதுதவிர நாய்களை கையாளுதல், காயம்பட்ட விலங்குகளை கவனித்து கொள்வது மற்றும் முதியோர் இல் லத்தில் ஒரு நாள் சேவையில் ஈடுபடுவது போன்ற பணியில் ஈடுபட்டனர்.

குறைதீர் கூட்டம் இன்று ரத்து

ஈரோடு, மே 28- ஜமாபந்தி நடைபெற்று வருவதால் ஈரோடு மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நடைபெறும் வாராந்திர குறைதீர் கூட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் கடந்த மே 25 ஆம் தேதி முதல் ஜமாபந்தி தொடங்கியுள்ளது. வரும் மே 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கொடுமுடி, மொடக்குறிச்சி, பவானி, ஈரோடு மற்றும் நம்பியூர் ஆகிய வட்டங்களில் மே 29 ஆம் தேதி (இன்று) வரை நடைபெறு கிறது. தாளவாடி மற்றும் அந்தியூர் வட்டங்களில் 30 ஆம் தேதி (நாளை) வரையிலும், கோபிசெட்டிபாளையம்,  சத்தியமங்க லம் மற்றும் பெருந்துறை ஆகிய வட்டங்களில் மே 31 வரை யிலும் அந்தந்த வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறுகிறது. எனவே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் நடைபெறும் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்களன்று (இன்று) நடைபெறாது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அந்தந்த வருவாய் தீர் வாய அலுவலர்களிடமே அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

விளம்பரங்கள் அகற்றம்

ஈரோடு, மே 28- ஈரோடு, அந்தியூர் பேரூ ராட்சிக்குட்பட்ட 18 வார்டு  பகுதிகளிலும் அனுமதி யின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், பேனர் கள் மற்றும் பிளாஸ்டிக் போர்டுகள் அகற்றப்பட்டு வருகிறது. அந்தியூர் பேரூ ராட்சி செயல் அலுவலர்  செல்வகுமார் தலைமை யில், அதிகாரிகள் இப்பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.  நகராட்சி நிர்வாகம் மற்றும்  குடிநீர் வழங்கல் துறை அறி விப்புக்கள் 2023 - 2024ன்படி நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் நடை முறைப்படுத்தப்பட்டு வரு கின்றது.