districts

தஞ்சையில் நடைபயிற்சியின் போது வாக்குச் சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

தஞ்சாவூர், மார்ச் 24 - தஞ்சாவூரில் நடைப்பயிற்சி மேற்கொண்ட படியே, திமுக வேட்பாளர் முரசொலிக்கு ஆதரவாக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்குச் சேகரித்தார். தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி, நாகப்பட்டி னம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் ஆகியோருக்கு வாக்கு சேகரிப்ப தற்காக, வெள்ளிக்கிழமை இரவே தஞ்சாவூர் வந்திருந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், சனிக்கிழமை காலை அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் வேட்பாளர் முரசொலியுடன் நடைப்பயிற்சி சென்றார்.  அப்போது அங்கு பல்வேறு விளை யாட்டு பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த சிறுவர், சிறுமிகள், பொதுமக்கள் முதல்வர் ஸ்டாலி னைக் கண்டதும் உற்சாகமாக ஓடிவந்து பேசி னர். அப்போது பெரியவர்கள், குழந்தைக ளுடன் செல்பி, வாலிபால் விளையாட்டு என சுமார் அரை மணி நேரத்தைக் கழித்த  முதல்வர் அங்கிருந்தவர்களுடன் உரை யாடினார். தொடர்ந்து நடைப்பயிற்சிக்கு வந்த வர்களிடமும் பொதுமக்களிடமும் வாக்குச் சேகரித்தார். அங்கிருந்து காமராஜ் மார்க்கெட்டிற்கு சென்ற முதல்வர், வியாபாரிகளிடமும், பொது மக்களிடமும் வாக்கு கேட்டார். அங்கு வியா பாரிகள் அளித்த சால்வைகளை பெற்றுக் கொண்டார். பின்பு, கீழ ராஜவீதியில் உள்ள  தேநீர்க்கடை ஒன்றில் அமர்ந்து பொது மக்கள், கட்சியினருடன் தேநீர் அருந்தினார்.  காவிரி பாசனப் பகுதியைச் சேர்ந்த 16 விவசாயிகள் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்து ரையை ஒன்றிய அரசு அமல்படுத்த வலி யுறுத்த வேண்டும்; தமிழக நதிகளை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தினர். முதல்வருடன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முன்னாள் ஒன்றிய இணையமைச்சர் ச.சு. பழநிமாணிக்கம், எம்எல்ஏக்கள் துரை. சந்திர சேகரன், டிகேஜி நீலமேகம், வேட்பாளர் முர சொலி, காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் உள்ளிட்டோர் உடனிருந்த னர்.