நாமக்கல், மார்ச் 1- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்-னின் பிறந்தநாள் கொண்டாட்டம் சனியன்று பள்ளிபாளையத்தில் நடை பெற்றது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டா லின்-னின் பிறந்தநாள் சனியன்று திமுகவினரால் உற்சாக மாக கொண்டாடப்பட்டது. அதன்ஒருபகுதியாக நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், கொடியேற்று விழா நடைபெற்றது. திமுக நகர் மன்றத் தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் பாலமுரு கன் ஆகியோர் தலைமையில் இந்நிகழ்ச்சியில், திமுக மேற்கு மாவட்ட முன்னாள் துணைச்செயலாளர் வெப்படை செல்வ ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதன்பின் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் நோயாளிக ளுக்கு பால், பிரட், பன் ஆகியவை வழங்கபட்டு, சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட் டது. இந்நிகழ்வில் திமுக வார்டு உறுப்பினர்கள், இளை ஞரணியினர், மகளிரணியினர், கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.