districts

img

கழிவுநீர் குழாய் வீடு - சிதம்பரம் இரவிச்சந்திரன்

அன்னை பூமியில் தலை சாய்க்க ஒரு இடம் இல்லாமல் தவிக்கும்  மனிதர்கள் ஏராளம். வீடு இல்லாமல் தினம் தினம் இவர்கள் தெருவோரங்களில் பாது காப்பு இல்லாத சூழ்நிலையில் இரவுப் பொழுதுகளைக் கழிக்கின்றனர். தெலுங் கானாவைச் சேர்ந்த ஒரு இளம்பெண் இதற்கு ஒரு அற்புதத் தீர்வு கண்டுள்லார். கழிவுநீர்க் குழாய்க்குள் எல்லாவித வசதிகளுட னும் கூடிய ஒரு வீடு! கேட்கும்போது வியப்பாக இருந்தாலும் வீடு இல்லாமல் அலைபவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் இந்த இளம் பெண் இந்த திட்டத்தை உருவாக்கி யிருக்கிறார். தெலுங்கானா  மாநிலத்தில் வாழும் மானச ரெட்டி என்ற இளம் பொறி யியலாளர்தான் அவர். ஹாங்காஞ்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜெயின்ஸ் சைபர்ட்டச்சர் என்ற நிறுவனம் உருவாக்கிய திட்டத்தை மானச ரெடி இந்தியாவில் நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்.

ஒபோட் குழாய் வீடு (Opod tube houses) என்பது இந்தக் குழாய் வீடுகளுக்குப் பெயர். 2019ம் ஆண்டு புள்ளிவிவரங்கள்படி இந்தியாவில் 63 இலட்சம் பேருக்கும் மேல் வீடற்றவர்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கு வாழ அவசியமான அடிப்படை வசதிகள் எவையும் இல்லை என்று அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் பெரிய குழாய்களுக்குள் வீடுகளை கட்டலாம் என்ற எண்னம் மானச ரெட்டிக்கு ஏற்பட்டது.

சிமெண்டைப் பயன்படுத்தி கழிவுநீர்க் குழாய்களை உருவாக்கும் ஒரு நிருவனத்தை  இதற்காக அவர் தொடர்புகொண்டார். தேவைகளுக்கு ஏற்றவிதத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி குழாய் வீட்டைக் கட்டி மானச வாங்கினார். ரெட்டியின் தாய் கொடுத்த ஐந்து இலட்சம் ரூபாயைப் பயன்படுத்தி குழாய்வீடு மற்றும் அதற்கு தேவையான வாசல் கதவு, ஜன்னல்கள், குளியலறையில் வேண்டிய பொருட்கள், சமையலறையில் தொட்டி, மின் சாதனங் களை வாங்கினார். முதல் குழாய் வீடு கட்ட 24 நாட்கள் ஆனது. இந்த வீட்டில் சிறிய லிவ்விங் ரூம்,  குளியலறை, சிங்க் பொருத்தப்பட்ட சமைய லறை, படுக்க மட்டும் பயன்படுத்தக்கூடிய ஒரு படுக்கையறை ஆகியவை உள்ளன. வீட்டிற்குள் சூட்டை குறைப்பதற்காக குழாய்க்கு வெளிப்பக்கம் வெள்லை வண்ணம் பூசப்பட்டுள்லது.

வீட்டிற்குள் போதிய வசதிகள் இருக் கிறதா என்பதை அறிவதற்காக மானச ரெட்டி ஒரு அயல் மாநிலத் தொழிலாளியை ஏழு நாட்கள் குழாய் வீட்டிற்குள் தங்கவைத்தார். இவ்வாறு வீட்டில் குடியிருக்க வருபவர்க ளுக்கு இன்னமும் என்னென்ன தேவை என்பதை அரிந்து மானச ரெடி அதற்கு ஏற்றவிதத்தில் இந்த வீட்டில் மாற்றங்களைச் செய்துள்லார். இந்தத் திட்டம் ஆரம்பித்த நாளன்றே சாம்னவி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் (Samnavi Constructions) என்ற பெயரில் மானச ஒரு நிறுவனத்தை தொடங்கினார். குடியிருப்பதற்கு அடிப்படையாகத் தேவைப்படும் வசதிகளை கருத்தில் கொண்டு ஒருவர் நிமிர்ந்து நிற்கக்கூடிய உயரத்துடன் குழாய் வீடுகளை கட்டித் தரச்சொல்லி வாங்குகிறார்.

குறைவான இடத்தில் ஒரு வீட்டிற்கு அவசியமான எல்லா வசதிகளும் உள்ள டக்கிய ஒன்று என்பதுதான் குழாய் வீடுகளின் சிறப்பு அம்சம். இப்போது உருவாக்கப்படும் வீடுகளில் ஒரு படுக்கையறை மட்டுமே உள்ளது. ஒன்றிற்கும் மேற்பட்ட படுக்கையறைகளுடன் கூடிய வீடுகளை விரைவில் கட்ட மானச திட்டமிட்டுள்ளார். இதற்குள் இந்த குழாய் வீடுகள் பிரபலமடையத் தொடங்கியுள்ளன. கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், ஒடிசா ஆகிய இடங்களில் இருந்து குழாய் வீடுகளை கட்ட தனக்கு இருநூற்றிற்கும் மேற்பட்ட வாய்ப்புகள் வந்துள்லதாக மானச கூறுகிறார். கோவிட் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அரிவிக்கப்பட்டபின் கட்டுமான வேலைகளை தொடங்க திட்டமிட்டுள்லார். சிந்தனை செய்தால் மனைதன் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு மான்ச ரெட்டியின் இந்தக் குழாய் வீடுகள் சிறந்த எடுத்துக்காட்டு. கழிவு நீரைக் கொண்டு செல்ல மட்டுமல்ல வீடு இல்லாமல் தெரு வில் வாழும் கோடிக்கணக்கான மனிதர்க ளின் வாழ்வாதாரப் பிரச்சனையையும் இத்தகைய குழாய்களால் தீர்க்கமுடியும் என்பதை இந்த இளம்பெண் நிரூ பித்துள்ளார். வீடில்லாமல் பூமியில் யாரு மில்லை என்ற நிலை உருவாக இது போன்ற வித்தியாசமான திட்டங்கள் உதவும் என்பது உறுதி.