நாமக்கல், மே 4- வெப்பநிலை உயர்ந்து கொண்டே செல்வதால், கோழிக ளுக்கு தீவிர வெப்ப அயற்சிக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல் வெப்பம் 105.8 டிகிரி பாரன் ஹீட்டாகவும், இரவு வெப்பம் 72.5 டிகிரி பாரன்ஹீட்டாகவும் காணப்ப டும். இனிவரும் நாட்களில் வானம் லேசான மேகமூட்டத்துடனும், மாவட் டத்தின் சில இடங்களில் லேசான மழையும் எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 107.6 டிகிரி பாரன் ஹீட்டுக்கு மிகாமலும், இரவு வெப் பம் 77 டிகிரி பாரன்ஹீட்டாகவும் காணப்படும். காற்று தெற்கு திசை யில் இருந்து மணிக்கு 12 கி.மீ. வேகத் தில் வீசக்கூடும். கடந்த வாரம் கோழி யின நோய் ஆய்வகத்தில் பரிசோ திக்கப்பட்ட இறந்த கோழிகள் பெரும் பாலும் வெப்ப அயற்சி நோயின் தாக் கத்தால் பாதிப்புக்குள்ளாகி இறந்தி ருப்பது தெரியவந்துள்ளது. பகல் நேர வெப்பநிலை 107.6 டிகிரி பாரன் ஹீட் அளவில் உயர்வதால் கோழி கள் தீவிர வெப்ப அயற்சிக்கு உள் ளாக வாய்ப்புள்ளது. எனவே, பண் ணையாளர்கள் கோடைகால பராம ரிப்பு முறைகளைக் கையாள வேண் டும். வெப்ப அயற்சியின் தாக்கத் தைக் குறைக்க தெளிப்பான்கள் உப யோகிக்க வேண்டும். வெயில் குறைந்த நேரங்களில் அதிகாலை, மாலை வேளைகளில் தீவனம் அளிக்க வேண்டும். வைட்டமின்-சி சார்ந்த நுண்ணூட்டச் சத்துகளை உப யோகிக்க வேண்டும் என அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.