districts

img

கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்

சேலம், பிப்.5- கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கோழிகளுக்கு இருவார கோழிக்கழிச் சல் தடுப்பூசி முகாம் நடைபெறுகி றது என சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தா தேவி தெரிவித்துள் ளார். இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது, “ராணிகட்” என்னும் வெள்ளைக் கழிச்சல் நோய் கோழிகளில் நச்சுயிரியால் ஏற்படும் தொற்று நோயாகும். இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளில் வெள்ளை அல்லது பச்சை கழிச்சல், மூச்சுத்திணறல், நடுக் கம், வாதம் மற்றும் தீவனம் உட்கொள்ளும் அளவு குறைதல் ஆகியவை ஏற்படும். இந்நோய் பாதித்த சில கோழிகள் தலையை இரண்டு கால்களுக்கு இடையில் செருகிக் கொள் ளும். சேலம் மாவட்டத்தில் கோழிகளில் ஏற்படும் வெள்ளைக் கழிச்சல் நோயினை கட்டுப்படுத்த தமிழக அரசின் உத்தரவின் படி, கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கோழிகளுக்கு இரு வார கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம் பிப்.1 முதல் பிப்.14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இம்முகாம்கள் மூலம்  மாவட்டத்தில் உள்ள அனைத்து புறக்கடை கோழிகளுக்கும் வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசி இலவசமாக போடப் படும். இத்திட்டத்தினை செயல்படுத்த 4.372 லட்சம் டோஸ்கள் வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசி மருந்து பெறப்பட்டு தயார் நிலையில் உள்ளது. எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் மற்றும் கோழி வளர்ப் போர் அனைவரும் அருகிலுள்ள கால்நடை நிலையங்க ளில், அவர்களது 8 வாரம் முதல் 12 வாரங்களுக்கு மேற்பட்ட கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய்க்கான தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.