districts

img

நாமக்கல்லில் செஸ் போட்டி: ஆட்சியர் துவக்கி வைத்தார்

நாமக்கல், ஜூலை 19- 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, நாமக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் அனைத்து பிரிவினருக்குமான  சது ரங்க போட்டிகளை மாவட்ட ஆட்சி யர் ஸ்ரேயா பி சிங் செவ்வாயன்று துவக்கி வைத்தார். இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44 ஆவது  செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி மாமல்லபுரத்தில் ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப் போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற் கும் மேற்பட்ட வீரர், வீராங்கனை கள் பங்கேற்கின்றனர். இதற்கி டையே தமிழக முதல்வரின் ஆணை யின்படி, மாநிலம் முழுவதும் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பல் வேறு விழிப்புணர்வு மற்றும் விளம் பரப்படுத்தும் பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு  விழிப்புணர்வு மற்றும் விளம்பரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. அதன்ஒருபகுதியாக நாமக் கல் மாவட்ட விளையாட்டரங்கில் அனைத்து அரசுத்துறை அலுவலர் கள், பணியாளர்கள், மாணவ, மாண விகள் உள்ளிட்ட அனைத்து பிரி வினருக்குமான சதுரங்க போட்டி களை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா  பி சிங் செவ்வாயன்று துவக்கி வைத்தார். இப்போட்டியில் 180க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர். இந்த போட் டிகளுக்கான ஏற்பாடுகளை தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்கள், நாமக்கல் மாவட்ட சதுரங்க சங்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த னர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளை யாட்டு அலுவலர் க.கோகிலா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சி.சீனிவாசன், நாமக்கல் மாவட்ட சதுரங்க செயலாளர் எஸ்.ஞான சேகர் உட்பட அரசுத்துறை அலுவ லர்கள், பயிற்சியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.