districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பயிர் காப்பீடு மற்றும் கிசான் கடன் அட்டைக்கான சிறப்பு முகாம்

கோவை, ஏப்.21-  கோவையில் பயிர் காப்பீடு மற்றும் கிசான் கடன் அட் டைக்கான சிறப்பு முகாம்  நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப் பில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்டம் முழுவதும் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் வேளாண்மை மற்றும் சகோதர துறைகளின் மூலம் வருகிற 24 ஆம் தேதி முதல் மே 1 ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடத்தும் “சிறப்பு விவசாயிகளின் பங்களிப்பே எமது முன்னுரிமை” என்கிற முகாம் நடைபெறவுள்ளது. இதில்  அனைத்து விவசாயி களும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். ஒரு வார காலத்திற்கு நடைபெறும் இச்சிறப்பு முகாம்க ளில் வேளாண்மைத் துறையினால் நடத்தப்படும் முக்கி யத் திட்டங்களான பயிர் காப்பீடு, உழவர் கடன் அட்டை, மண் மாதிரிகள் சேகரித்தல் மற்றும் நுண்ணீர் பாசனத் திட்டம் குறித்த விரிவான விளக்க காட்சிகள், கருத்த ரங்குகள் மற்றும் செயல் விளக்கங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளன.  மேலும், பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் முக்கிய அம்சங்க ளான விவசாயிகள் காப்பீடு செய்திடும் வழிமுறைகள், காப்பீடு பெற தகுதிகள், இழப்பீட்டிற்கான காரணிகள், இழப் பீடு கணக்கிடும் முறை, காப்பீடு விண்ணப்பத்தின் தற் போதைய நிலையை அறியக் கூடிய வழிவகைகள், புகார் கள் மற்றும் சந்தேகங்கள் ஆகியவற்றிற்கான வழி முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விரிவான விளக் கங்கள் வழங்கப்படவுள்ளன இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

கோவை: அவினாசி சாலையில் சுரங்க நடைபாதை

கோவை,ஏப்.21- கோவை, அவினாசி சாலையில் 5 இடங்களில் சுரங்க நடைபாதை அமைய உள்ளதாக நெடுஞ்சாலைத்துறையி னர் தெரிவித்துள்ளனர். கோவை அவினாசி சாலையில் ரூ.1621.30 கோடி மதிப் பில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும்,கோவை மாநகரின் பிரதான சாலையாக கருதப் படும் அவினாசி சாலையில் விமான நிலையம், பல்வேறு கல்லூரிகள், பள்ளிகள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், டைடல் பார்க் போன்றவை அமைந்துள்ளன. இதையடுத்து, சேலம், ஈரோடு, திருப்பூர் என பல முக்கிய நகரங்களுக்கும் முக்கிய வழித்தடமாகவும் இருப்பதால் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் 10.10 கிமீ நீளத்தில் இந்த பறக்கும் பாலம் அமைக்கப்படுகிறது. இப்பாலப் பணிகளில் 5 முக்கியமான இடங்களில் சுரங்க நடைபாதையும் அமைக்கப்பட உள்ளது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கள் கூறுகையில்,கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளை யம் வரை முக்கியமான ஐந்து இடங்களில் சுரங்கநடை பாதை அமையவுள்ளது. மேலும் மூன்று இடங்களில் சிறு பாலங்களை அகலப்படுத்துதல் மற்றும் மூன்று இடங்க ளில் சிறுபாலங்களை திரும்பக்கட்டுதல் பணியும் நடை பெறவுள்ளது என்று  தெரிவித்தனர்.

பொள்ளாச்சியில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி

கோவை, ஏப்.21-  பொள்ளாச்சியில் மின் கம்பத்தில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் மின்சாரம் தாக்கி  பரிதாபமாக உயிரழந்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பொள்ளாச்சியை அடுத்த ஜமீன்முத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (60). இவர் மின்வாரிய ஊழி யராக பணியாற்றி வந்தார். இதனிடையே பாலகிருஷ்ணன் செவ்வாயன்று பி.ஏ.பி வாய்க்கால் அருகே மின் கம்பத் தில் ஏற்பட்ட பழுதை நீக்கிக் கொண்டிருந்தார். அப்போது, பாலகிருஷ்ணன் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி தாலு்கா காவல்துறையினர், அவரது உடலை மீட்டு பொள் ளாச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப் பினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். மின் வாரிய ஊழியர் பணியின் போது உயிரிழந்தது சக ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று நாட்கள் கோவில் தேரோட்டம் நடத்த முடிவு

அவிநாசி, ஏப்.21-  அவிநாசி லிங்கேஸ்வ ரர் கோயில் சித்திரைத் தேர்த்  திருவிழா இந்த ஆண்டு மே.5  ஆம் தேதி தொடங்கி நடை பெறவுள்ளது. பெரிய தேரோட்டத்தை மே.12 ஆம்  தேதி வியாழனன்று காலை குலாலரர் மண்டபத்தின் எதிர்புறம் சாலையின் திருப் பத்தில், பகல் ஒரு மணிக் குள் நிறுத்துவது, மறுநாள் மே.13 ஆம் தேதி வெள்ளி யன்று காலை, நிலை சேர்ப் பது, மே.14 ஆம் தேதி சனி யன்று காலை ஒரு நாள் மட்டும் அம்மன் தேரோட்டம் நடத்துவது என முடிவு செய் துள்ளதாக கோயில் நிர் வாகம் தெரிவித்துள்ளது.

கஞ்சா கடத்தல் இருவர் கைது

அவிநாசி, ஏப்.21- அவிநாசி காவல்துறை யினர் ஈரோடு சாலை பழங் கரை பிரிவில் புதனன்று இரவு வாகனச் சோதனை யில் ஈடுபட்டிருந்தனர். அப் போது, சந்தேகப்படும்படி யாக மூட்டையுடன் கோவை யில் இருந்து பெருமாநல் லூர் நோக்கி இருசக்கர வாக னத்தில் சென்று கொண்டி ருந்த வெளிமாநிலத்தவர் களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப் போது அவர்கள் விற்பனை செய்வதற்காக 9 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து அவிநாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஒரி சா மாநிலத்தைச் சேர்ந்த பிநிரஞ்சன்தாஸ் மகன் பிணாயதாஸ்(25), பைதர் மஜ்ஹி மகன் கிரிதரிமஜ்ஹி (35), ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

உலக புத்தக தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் புத்தகக் கண்காட்சி

கோவை, ஏப்.21- பள்ளி மாணவர்களிடையே வாசிப்புத்திறனை அதிகரிக் கும் விதமாகவும், உலக புத்தக தினத்தை முன்னிட்டும் மேட் டுப்பாளையம் தனியார் பள்ளியில் புத்தகக் கண்காட்சி நடை பெற்றது. ஆண்டுதோறும் ஏப்ரல் 23 ஆம் தேதி உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டும் பள்ளி மாணவர்களிடையே வாசிப்புத்திறனை அதிகரிக்கும் வித மாகவும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த  கல்லாறு பகுதியில் செயல்பட்டு வரும் சச்சிதானந்த ஜோதி  நிகேதன் பள்ளியில் வியாழனன்று புத்தகக் கண்காட்சி  நடத் தப்பட்டது. இக்கண்காட்சியினை ஜெர்மனியின் துரிஞ்சியா மாகா ணத்தின் இயக்குநர் பிரான்சிஸ்கா கிண்டர் வாட்டர் மற்றும்  மேட்டுப்பாளையம் நகர்மன்ற துணைத்தலைவர் அருள் வடிவு ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர். இந்த கண்காட்சியில் பல்வேறு பதிப்பகங்களின் சார்பில்  6 அரங்குகள் அமைக்கப்பட்டு, தன்னம்பிக்கை கட்டுரைகள்,  நாவல்கள், தலைவர்களின் வரலாறு, குழந்தைகளுக்கான புத்தகங்கள், ஆன்மீகம், பொன்னியின் செல்வன், பார்த்தி பன் கனவு உள்ளிட்ட இலக்கியங்கள், தமிழ் அகராதிகள் உள்ளிட்ட சுமார் 25 ஆயிரம் புத்தகங்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

விஷப்பூச்சி கடித்து பெண் உயிரிழப்பு 

கோவை, ஏப்.21-  கோவை குறிச்சி பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் உசெய்னர் (68). இவரது மனைவி கமருநிஷா (65). கடந்த 17ஆம் தேதி  கமருநிஷா தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீ ரென ஏதோ ஒரு பூச்சி கடித்துள்ளது. மறுநாள்  அவர் கோவை  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கமருநிஷா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குனியமுத்தூர் காவல்துறையினர் வழக்குப் ்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.12 லட்சம் மோசடி : ஒருவர் கைது

கோவை, ஏப்.21- தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வாரியத்தலைவர் பதவி வாங்கி தருவதாகக் கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்த  நபரை கோவை காவல்துறையினர் கைது செய்தனர்.   கோவை காமராஜ் சாலையை சேர்ந்தவர் மதிவாணன் (60). வியாபாரி. இவர் லோக் ஜனசக்தி கட்சியில் உறுப்பின ராக உள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவ ருக்கு அதே கட்சியில் உறுப்பினராக இருந்த கோவைப் புதூர் அறிவொளி நகரைச் சேர்ந்த ரங்கன் (49), என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.  ரங்கன் வீட்டு பத்திரம் போன்றவற்றை பெற்று பணம் வாங்கி கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் ரங்கன் மதிவாணனிடம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தின் வாரிய தலைவர் பதவி வாங்கித் தருவதாக ஆசை  வார்த்தை கூறி, அதற்கு ரூ.12 லட்சம் வரை செலவாகும் என வும் தெரிவித்துள்ளார். இதனை உண்மை என நம்பிய மதிவா ணன் அவருக்கு 4 கட்டங்களாக ரூ.12 லட்சம் பணத்தைக் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தைக் கொடுத்து நீண்ட நாட்களாகியும் வாரிய தலைவர் பதவி வாங்கி கொடுக்காத தால் சந்தேகமடைந்த மதிவாணன், ரங்கனை நேரில் சந்தித்து  பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்துள் ளார்.  இந்நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மதிவா ணன் இது குறித்து குனியமுத்தூர் காவல்நிலையத்தில்  புகார் செய்தார். புகாரின் காவல்துறையினர் வழக்குப் பதிவு  செய்து மோசடியில் ஈடுபட்ட ரங்கனை கைது செய்தனர்.  பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.