தாராபுரம், டிச.14- சென்னைக்கு 40 ரூபாய்க்கு அனுப்ப வேண்டிய இளநீரை, மழை வெள்ளத் தால் உள்ளூரில் 22 ரூபாய்க்கு விற்க வேண்டிய சூழல் உருவாகி இருப்பதாக விவசாயிகள் வேதனையடைந்துள் ளனர். தாராபுரம், பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து சென் னைக்கு இளநீர் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு கொண்டு செல்லப்படும் இளநீர் சென்னையின் பல பகுதிகளில் விற்பனை செய்யப்ப டும். தாராபுரம், பொன்னாபுரம், நாரணா புரம், கோவிந்தாபுரம், கொட்டமுத்தம் பாளையம், தாசர்பட்டி, திப்பம்பட்டி, ஏரிப்பட்டி, பூசாரிபட்டி, குடிமங்கலம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகமாக உள்ளது. சென்னையை சேர்ந்த வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து இளநீரை சென்னை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல விலை பேசி முன்பனம் கொடுத்திருந்தனர். 40 ரூபாய்க்கு தாரா புரம் பகுதியில் இருந்து இளநீர் வெட்டி எடுத்து செல்ல இருந்த நிலையில், தற் போது சென்னையில் பெய்த மழையின் காரணமாக டெலிவரி எடுக்க இயலாது என வியாபாரிகள் கூறிவிட்டனர். இதன் காரணமாக தாராபுரம் பகுதியில் சென் னைக்கு அனுப்ப வெட்டிய ஒரு லட்சம் இளநீர் தேக்கமடைந்துள்ளன. கோவை, ஈரோடு, திருப்பூர் உள்பட மற்ற பகுதிகளில் உள்ள வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் 40 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய சென்னை வியாபாரிகள் முன்ப ணம் கொடுத்த நிலையில், தற்போது கோவை, திருப்பூர், ஈரோடு வியாபாரி கள் வியாபாரம் மந்தமாக இருப்பதாக கூறி ரூபாய் 22 க்கு இளநீர் கேட்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ள னர். மேலும் இளநீர் வெட்டி எடுக்காமல் தென்னைமரத்தில் விட்டிருந்தால் தேங்காய் ஆகி விற்று இருக்கலாம். ஆனால் இப்போது வெட்டி வைத்த தால் அழுகிவிடும் அபாயம் உள்ளது. எனவே தற்போது சென்னையில் வியா பாரிகளுக்காக வெட்டி எடுத்த இள நீரை வந்த விலைக்கு விற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.