districts

img

“மாறும் பருவ நிலை - குளிர்கால உடைகள் விற்பனை தீவிரம்” - எம்.பிரபாகரன்

எம்.பிரபாகரன் நாமக்கல், டிச.3-  மாநிலம் முழுவதும் தொடர் மழை  வெளுத்து வாங்கிக்கொண்டிருக்க,  இதனைத்தொடர்ந்து தற்போது பணி மூட்டம் அதிகரித்து, குளிர் வாட்டி வதைக்க தொடங்கி உள்ளது. இதன்  காரணமாக ஜெர்கின், சொட்டர் மற் றும் குளிரை தாங்கும் ஆடைகளின் விற் பனை களை கட்டி வருகிறது. தமிழகம் முழுவதும் தற்போது பெஞ்சால் புயல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. சென்னை மற்றும் புதுச் சேரி மாநிலம் உள்ளிட்ட பல்வேறு இடங் களிலும் புயல் மழையின் தாக்கத்தால் ஏராளமான பொதுமக்கள் வீடுகளை உடைமைகளை இழந்து பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். தொடர்ந்து தற் போது வரை புயலின் வேகம் குறைந்தா லும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளி லும் ஆங்காங்கே மழை பெய்து வரு கிறது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக  தமிழகம் முழுவதுமே பொது மக்களின்  இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு  ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் மழையின் தாக்கத்தின் காரணமாக, வீடு களை விட்டு வெளியே வரவே தயக்கம்  காட்டுகின்றனர். மேலும் அன்றாடம் பள்ளி, கல்லூரி! செல்லும் மாணவ மாணவியர் கூலித் தொழிலாளர்கள்! பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு பணிக்கு செல்வோர் என பல்வேறு தரப் பினரும் மழையின் தாக்கத்தால் பாதிப் புக்கு உள்ளாகி உள்ள நிலையில், கட்டா யம் பணிக்குச் சென்றே ஆக வேண்டிய  சூழலில் உள்ளவர்கள், பெரும்பாலா னோர் கொட்டும் மழையில் நனைந்த வாறும், குடை பிடித்த படியும் பணிக்கு  சென்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கொட்டும் மழையில் இருந்தும், நடுநடுங்க. வைக் கும் பனியிலும் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக பொதுமக்கள் தற் போது குளிர்கால உடைகளை வாங்குவ தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஈரோடு நாமக்கல் சாலையில் ஏராள மான ஜவுளி கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது கணிசமான அளவில் குளிர்கால உடைகள் விற் பனை அதிகரித்துள்ளதாக கடை வியா பாரிகள் தெரிவிக்கின்றனர்.  இது குறித்து தனியார் ஜவுளி கடையை சேர்ந்த முருகானந்தம் கூறு கையில், ஒவ்வொரு ஆண்டுமே நவம் பர் மாத துவக்கத்திலேயே குளிர்கால உடைகள் விற்பனை மெல்ல மெல்ல ஆரம்பித்து ஜனவரி மாத இறுதி வரை  குளிர்கால உடைகள் விற்பனை என் பது இருக்கும். தற்போது நவம்பர் மாதம்  இரண்டாவது வாரம் முதலே சீதோ சன நிலை மாறி பனி அதிகளவு சூழ்ந்து  காணப்படுவதால் பள்ளி குழந்தைக ளுக்கு தேவையான கால் உறைகள், ரெயின் கோட்டுகள், ஜெர்கின்கள், மப் ளர் உள்ளிட்டவற்றை வாங்க பொதுமக் கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெ னில் தற்போது டிசம்பர் மாத துவக்க மாக இருந்தாலும் இன்னும் இரண்டு மாத காலங்களுக்கு முழுமையாக குளிர் இருக்கும் என்பதாலும், தற் போது கூடுதலாக புயல் மழை தாக்கத் தாலும் குளிர் அதிகரித்து சீதோசன நிலை மாறுபாடு ஏற்பட்டுள்ளதாலும், காலை துவங்கி மாலை வரையிலுமே வானம் மேகமூட்டத்துடன் இருப்பதா லும், குழந்தைகளுக்கு பல்வேறு வித மான தொந்தரவுகள் இருக்கும் என்ப தால் குளிர்கால உடைகள், விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. சராசரி யாக 50 ரூபாயிலிருந்து 5000 ரூபாய் வரையிலான குழந்தைகளுக்கான பல் வேறு வகையான குளிர்கால உடை கள் விற்பனை செய்யப்பட்டு வருகி றது. கணிசமான அளவில் மழையின் தாக்கத்தால் குடை விற்பனையும் அதிக ரித்து உள்ளது என தெரிவித்தார்.