districts

img

சிலம்பத்தில் சாம்பியன்: கோவை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

கோவை, ஜூன் 7- சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில், 10 தங்கம் உட்பட 16 பதக்கங்கள் வென்று, ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டம் தட்டித்தூக்கிய கோவையைச் சேர்ந்த வீரர், வீராங்க னைகளுக்கு மேள, தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

யூத் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்திய சிலம்பம் மற்றும் அந்தமான் தமிழர் சங்கம் சார்பில், சர்வதேச அளவி லான சிலம்பம் போட்டிகள் கடந்த ஜூன் 2, 3, 4 ஆகிய தேதிகளில் அந்தமானில் நடைபெற்றது. இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கிடையே நடை பெற்ற இப்போட்டியில், இந்தியா சார்பில் கோவை மாவட்டம், சூலூர் ரௌத்திரம் அகாடமியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 13 பேர் கலந்து கொண்டனர். ஒற்றைக்கம்பு, இரட்டைக்கம்பு, சுருள்வாள், மான் கொம்பு, வாள் வீச்சு என பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில், 13 ,15, 17, 19, 21 ஆகிய வயது பிரிவு களில் மொத்தம் 10 தங்கம் மற்றும் 6 வெள்ளி உட்பட 16 பதக்கங்களை வென்று அசத்தினர். அதேபோல ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பை யையும் கோவை வீரர்கள் வென்று அசத்தியுள்ளனர். இந்நிலையில், கோவை திரும்பிய வெற்றி வீரர், வீராங்கனைகளுக்கு மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. இதில் பயிற்சியாளர் பாண்டீஸ் வரி மற்றும் தலைமை ஆசான்கள் வினோத், வெங்கடேஷ் உட்பட பெற் றோர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு, வெற்றியாளர்க ளுக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.