உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் செவ்வாயன்று தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகளை மாநில வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வழங்கினார். இதில், மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், மகளிர் திட்ட இயக்குநர் ஜாகிர் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.