திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தை மதவெறிமயமாக்கும் முயற்சியாக கடந்த நவ.17 அன்று துணைவேந்தர் தலைமையில் யாகம் நடத்தி “ஜெய் ஸ்ரீ ராம்” முழக்கங்கள் எழுப்பப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, இந்திய மாணவர் சங்கத்தின் திருவாரூர் மாவட்டக் குழு சார்பில் புதன்கிழமை பல்கலைக்கழக வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஆனந்த் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் கோ.அரவிந்தசாமி கண்டன உரையாற்றினார்.