திருப்பூர், மார்ச் 24- ஒன்றிய பாஜக அரசின் தொழிலா ளர் விரோத கொள்கைகளை எதிர்த்து மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித் துள்ள இரண்டு நாள் வேலை நிறுத்தம் குறித்து ஊத்துக்குளியில் தொழிற்சங் கத்தினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மோடி தலைமையிலான பாஜக ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள மார்ச் 28, 29 இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க ஊத் துக்குளி தாலுக்காவில் புதனன்று தெரு முனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, ஊத்துக்குளி ஆர்.எஸ், ஊத்துக்குளி நகர், கவுண்டம் பாளையம் நால்ரோடு, வெள்ளியம் பாளையம், ச.பெரியபாளையம், கூலி பாளையம் நால்ரோடு பகுதியில் துண் டறிக்கை விநியோகம் செய்யப்பட் டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்ட செயலாளர் ஆர். குமார், சிஐடியு மாவட்டக்குழு உறுப் பினர் வி.கே.பழனிசாமி, விவசாய தொழிலாளர் சங்க தாலுகா தலைவர் ஆர்.மணியன், தமிழ்நாடு விவசாயி கள் சங்க (சிபிஐ) தாலுகா செயலா ளர் ஜி.கே.கேசவன், ஏஐடியுசி நிர்வாகி கள் ரமேஷ், கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.