நாமக்கல், டிச.3- 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப் பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ் வாயன்று தமிழ்நாடு மின் ஊழியர் மத் திய அமைப்பினர் (சிஐடியு) ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப் பிட வேண்டும். ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பகுதிநேரப் பணியாளர் களை பணி நிரந்தரம் செய்திட வேண் டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 1.12.2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை உடனடி யாக துவங்க வேண்டும். அதுவரை இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ.5000 வழங்கிட வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் (சிஐடியு) செவ்வா யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் சங்ககிரி சாலை ஒட்டமெத்தை ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மின் திட்ட கிளைச் செயலாளர் அ.செல்வ குமார் தலைமை வகித்தார். சிஐ டியு மாவட்டத் தலைவர் எம்.அசோ கன், பள்ளிபாளையம் கோட்டச் செய லாளர் பழனிவேல், விசைத்தறித் தொழிலாளர் சங்க ஒன்றியச் செய லாளர் எஸ்.முத்துக்குமார் உள்ளிட் டோர் பங்கேற்று உரையாற்றினர்.