திருப்பூர், ஜூலை 24- திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பல்ல டம் கிளை மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது. இம்மாநாட்டை மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் டி. கோபாலகிருஷ்ணன் தொடக்கி வைத்தார். மாநாட்டுக்கு பல்லடம் கிளைத் தலைவர் மோகன் குமார் தலைமை வகித்தார். அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்க மண்டலப் பொதுச் செயலாளர் பி.செல்லதுரை, சிஐ டியு திருப்பூர் மாவட்டக்குழு உறுப்பினர் கே. திருவேங்கடசாமி, மத்திய அமைப்பின் திருப் பூர் கிளைச் செயலாளர் ஆர்.நாகராஜ் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். மின் ஊழியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும், அவுட் சோர்சிங் கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல்ல டம் கிளை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். இதில், கிளைத் தலைவராக ஜெய ராஜ், கிளைச் செயலாளராக ராமலிங்கம், பொருளாளராக சுந்தரம் உள்பட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் துணைத் தலைவர் ராமச்சந்திரன் நிறைவுரை ஆற்றி னார். எழுபதுக்கும் மேற்பட்ட மின் ஊழியர் கள் கலந்து கொண்டனர். முடிவில், காங்கே யம் கோட்டச் செயலாளர் சந்திரசேகர் நன்றி கூறினார்.