கோவை, செப்.24- சாம்சங் நிறுவன தொழிலாளர் போராட்டத்தை ஆதரித்து இந்திய தொழிற்சங்க மையம் கோவை மாவட்டக் குழு சார்பில் துடியலூர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் நிறுவன தொழிலாளர் போராட்டத்தை ஆதரித்து திங்களன்று கோவை மாவட்டம், துடியலூர் பேருந்து நிலையம் அருகே இந்திய தொழிற் சங்க மையம் கோவை மாவட்டக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இன்ஜினியரிங் சங்கத் தலைவர் சுப் பிரமணியன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஆர்.வேலுசாமி துவக்க உரையாற் றினார். இதில், சாம்சங் நிறுவனம் 8 மணி நேர வேலை நேரத்தை உறுதி செய் திட வேண்டும். தொழிற் சங்கத் தினை அங்கீகாரம் செய்து கோரிக் கைகளை பேசி முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை முழக்கம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட மூத்த தலைவர் யு.கே.வெள்ளிங்கிரி, இன்ஜினியரிங் சங்க பொதுச் செயலாளர் சி.துரைசாமி, பொருளாளர் எ.ஜி. சுப்பிரமணி யன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், ஏராள மான சிஐடியு மாவட்ட நிர்வாகி கள் கலந்து கொண்டனர். மின்வாரியம் இதை போன்று, சாம்சங் தொழி லாளர்கள் போராட்டத்திற்கு ஆத ரவு தெரிவித்து, கோவை மாவட் டம் டாடாபாத் மின் வாரிய மத்திய அலுவலகம் சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் செவ்வா யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதில், மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) மாநிலச் செய லாளர் டி.மணிகண்டன், செயற் குழு உறுப்பினர் காளிமுத்து, கோவை தெற்கு வட்டக் கிளைச் செயலாளர் ரத்னகுமார், வடக்கு வட்டக் கிளைச் செயலாளர் எம்.மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நீலகிரி இதேபோன்று, தனியார் முத லாளிகளுக்கு குறைக்கப்பட்ட வரி சலுகையை உயர்த்த வேண்டும். சாம்சங் தொழிலாளர்களின் நியாய மான கோரிக்கையை நிறை வேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உத கையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்பு நான்கையும் திரும்ப பெற வேண்டும். இந்திய மக்களை காவு வாங்கும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண் டும். தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ. 26 ஆயிரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். அரசு மற்றும் பொதுத் துறைகளில் உள்ள 30 லட்சம் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். தனியார் முதலாளிகளுக்கு குறைக்கப்பட்ட வரி சலுகையை உடனே உயர்த்த வேண்டும். அங்கன்வாடி ஆஷா தேசிய சுகாதார திட்டம் உள்ளிட்ட ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உத்திரவாதப்படுத்தி நிரந்தரப்படுத்த வேண்டும். விவ சாயிகளின் விலை பொருட்கள் குறைந்தபட்ச ஆதார விலையை உடனே வழங்க வேண்டும். சாம் சங் தொழிலாளர்களின் கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி அனைத்து தொழிற்சங்க கூட் டமைப்பின் சார்பில் செவ்வாயன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், உதகை ஏடிசி திடலில் அனைத்து தொழிற்சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.வினோத், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் இப்ரா ஹிம், எல்பிஎப் போக்குவரத்து செயலாளர் நெடுஞ்செழியன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். இதில் சிஐடியு மாவட்டப் பொருளாளர் நவீன் சந்தி ரன், ஏஐடியுசி மாவட்டச் செயலா ளர் மூர்த்தி, எல்பிஎப் கவுன்சில் செய லாளர் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.