districts

img

ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

சேலம், மார்ச் 9- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சேலம் மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் சர்வ தேச மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நங்கவள்ளியில் நடைபெற்ற  விழாவிற்கு டி. விஜயகலா தலைமை வகித்தார். எம். கார்த்திகா சங்க கொடியை ஏற்றி வைத்தார்.  இத னைத்தொடர்ந்து திறந்தவெளி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், வன்முறையற்ற சமூகம் படைத்திட, சம வேலைக்கு சம ஊதி யம் கிடைத்திட, மதச்சார்பற்ற இந் தியாவை பாதுகாத்திட உறுதி மொழி ஏற்கப்பட்டது.  இந்நிகழ்வில் மாதர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் கே. ராஜாத்தி, ஒன்றிய செயலாளர் ஜி.கவிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சேலம் தாலுகா மோகன் நகரில் நடைபெற்ற விழாவில் சங்கக் கொடியை மாவட்ட தலைவர் டி. பரமேஸ்வரி ஏற்றி வைத்தார். இதில் தாலுகா தலைவர் எஸ்.ராஜேஸ்வரி, தாலுகா செயலாளர் எம். செல்வி, விக்னேஷ்வரி, எஸ்.திவ்யா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல், சேலம் வடக்கு மாநகர கமிட்டியின் சார்பாக நடைபெற்ற நிகழ்வில் காவேரியம்மாள் சங்கக் கொடியை ஏற்றினார். இதில் திரளா னோர் கலந்து கொண்டனர்.