இந்நிலையில், பலத்த மழை காரணமாக வனப்பகுதிகளில் உள்ள ஓடைகள், பள்ளங்கள் மற் றும் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதற் கிடையே ஈரோடு மாவட்டம் தாள வாடி அடுத்துள்ள ஆசனூரி லிருந்து கர்நாடக மாநிலத்தை இணைக்கும் கொள்ளேகால் சாலை அரேப்பாளையம் பிரிவு அருகே உள்ள தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது. இதனால் போக்குவ ரத்து துண்டிக்கப்பட்டது. தரைப் பாலத்தின் அருகில் இருந்த பழமை வாய்ந்த பெரிய மரம் முறிந்து தரை பாலத்தின் குறுக்கே விழுந்ததால் தரைப் பாலம் சேதம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கேர்மாளம், குளியாடா, மாவள்ளம், கானக் கரை, தேவர்நத்தம் மற்றும் கர்நா டக மாநிலத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மலை கிராமங்க ளுக்கு போக்குவரத்து துண்டிக் கப்பட்டதால் மலை கிராம மக்கள் அவதி அடைந்தனர். இதேபோல் தாளவாடி சுற்று வட்டார பகுதியில் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் ஓடை களில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. விவ சாய நிலங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளதால் விவசாய பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரோடு, ஆக.31- தென்மேற்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக் கப்பட்ட மக்கள் தங்குவதற்கு ஏது வாக ஈரோடு மாவட்டத்தில் 9 நிவாரண முகாம்கள் திறக்கப்பட் டுள்ளன. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கர்நாடகத்திலும் அதிக மழை பொழிந்து வருகிறது. இத னால் அங்குள்ள அணைகளி லிருந்து காவிரி ஆற்றில் அதிகமான நீர் வெளியேற்றப்படுகிறது. ஏற்கனவே, மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலை யில், அணைக்கு 1 லட்சத்து 85 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணை முழு கொள்ளளவான 120 அடியைத் தொட்டு பல நாட்களாகியுள்ள நிலையில் அணைக்கு வரும் உபரி நீ்ர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. மேலும், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 9 ஆயிரத்து 800 கனஅடியாக உள்ளது.
இதில், கால்வாயில் ஆயிரத்து 500 கன அடியும், ஆற்றில் 8 ஆயிரம் கன அடி என மொத்தம் 9 ஆயிரத்து 500 உபரி நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் ஈரோடு, பவானி மற்றும் கொடுமுடி வட்டத்தில் ஆற்றங்கரையோர கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள 185 குடும்பத்தினர் வெளியேற்றப் பட்டுள்ளனர். இவர்களுக்காக பவானியில் 6, ஈரோடு 1, கொடுமுடி யில் 2 முகாம்கள் திறக்கப்பட் டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் இது வரை 343 குடும்பங்களை சேர்ந்த 1056 நபர்கள் முகாம்களில் பாது காப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள னர். இவர்களுக்குத் தேவையான உணவு, மருத்துவ உதவிகள் வழங் கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மாவட்டத்தில் பரவலான மழை பெய்து வருகிறது. இதனால் பெரும் பள்ளம் அணை நீர்மட்டம் 16.31 அடி யாகவும், வரட்டுப்பள்ளம் அணை 33.46 அடியாகவும் உள்ளது. இதனிடையே மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், மக்களையும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி, மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணணுண்னி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.