உதகை, டிச.28- தேயிலை தோட்டத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து பொக் லைன் வாகனம் மூலம் தேயிலை செடிகளை அகற்றியதாக கூறப் பட்ட புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் மீது 3 பிரிவுகளில் வழக் குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டம், மஞ்சூரை அடுத்த மணிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ (71). இவருடைய மனைவி பிரேமா. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் படித்து முடித்து வெளியூர்களில் பணிபுரிந்து வருகின்றனர். ராஜூ என்சிஎம்எஸ் அலுவலகத்தில் கணக் காளராக பணியாற்றி, ஓய்வு பெற்ற பின் தற்போது விவசாயம் மேற் கொண்டு வருகிறார். ராஜூவுக் கும், அவர்களது உறவினர்களுக் கும் மணிக்கல் மட்டம் பகுதியில் அடுத்தடுத்து தேயிலை தோட்டம் உள்ளது.
இந்நிலையில், ராஜூ வின் உறவினர்களிடம் இருந்து அப் பகுதியில் உள்ள இடத்தை அதி முக முன்னாள் அமைச்சர் புத்தி சந்திரன் விலைக்கு வாங்கியுள் ளார். மேலும், தேயிலை தொழிற் சாலை அமைப்பதற்காக ராஜூ வின் இடத்தை அவரிடம் கேட்டுள் ளார். ஆனால், ராஜூ இடம் கொடுக்க சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அதிமுக முன் னாள் அமைச்சர் புத்திசந்திரன் இடத்தை தருமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பொக்லைன் வாகனம் மூலம் முன்னாள் அமைச் சர் புத்திசந்திரன் தான் விலைக்கு வாங்கிய இடம் மற்றும் ராஜூவின் இடத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள தேயிலை செடிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற் றியதாக தெரிகிறது. இதுகுறித்து ராஜூ மஞ்சூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் உதகை ஊரக காவல் துணை கண்காணிப் பாளர் விஜயலட்சுமி, ஆய்வாளர் கண்மணி, உதவி ஆய்வாளர் தன பால் ஆகியோர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற் கொண்டனர். இதையடுத்து இச்சம் பவம் தொடர்பாக முன்னாள் அமைச் சர் புத்திசந்திரன் மற்றும் பொக் லைன் டிரைவர் மீது இந்திய தண் டனை சட்டம் 427 (சேதம் விளை வித்தல்), 447 (அத்துமீறி நுழைதல்), 506 (1) (மிரட்டல்) ஆகிய 3 பிரிவு களில் வழக்குப்பதிவு செய்யப் பட்டு உள்ளது. தற்போது புத்தி சந்திரன் அதிமுக அமைப்பு செய லாளராக இருப்பது குறிப்பிடத் தக்கது.