districts

img

உதகை கேரட் விலை சரிவு

உதகை, ஜன.21- வெளி மாநிலங்களில் இருந்து கேரட் வருகை அதிகரிப்பால், உதகை கேரட் விலை குறைந்துள் ளது. தேயிலைக்கு அடுத்த படியாக நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழி லாகவும், பொருளாதா ரத்தை நிர்ணயிக்ககூடிய ஒரு அங்கமாக காய்கறி விவ சாயம் விளங்கி வருகிறது. சுமார் 2 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் கேரட் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு விளை யக்கூடிய கேரட்டிற்கு தமிழகம் மட்டு மின்றி, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா உள் ளிட்ட பிற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது.  இந்நிலையில், தற்போது உதகையின் சுற்றுவட்டார பகுதிகளான கேத்தி பாலாடா, கொல்லிமலை, முத்தோரை பாலாடா, இத்தலார், எமரால்டு, அணிக்கோரை உள் ளிட்ட பல பகுதிகளில் கேரட் பயிரிடப் பட்டுள்ளது. கடந்த வாரம் வரை மேட்டுப் பாளையம் காய்கறி மண்டியில் கேரட் கிலோ ஒன்றிற்கு ரூ.70 முதல் ரூ.80 வரை  கிடைத்து வந்தது. இதனால், விவசாயிக ளுக்கு நல்ல லாபம் கிடைத்தது. இந்த சூழலில் குளிரூட்டப்பட்ட கண்டெய்னர் லாரி கள் மூலம் ஐதராபாத், தில்லி கேரட்டுகள் விற்பனைக்காக சென்னை கோயம்பேடு மற்றும் மேட்டுப்பாளையத்திற்கு கொண்டு வரப்பட்டன. இதன் காரணமாக உதகை கேரட் விலை சரிந்துள்ளது. தற்போது கடந்த சில நாட்க ளாக ரூ.30 முதல் ரூ.50 வரை மட்டுமே விலை போகிறது. கேரட் விளைச்சல் குறைந்துள்ள சூழலில், இந்த விலை குறைவால் தயார் நிலை உள்ள கேரட்டை அறுவடை செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்ற னர். சிலர் மேலும் விலை குறைந்து விடுமோ என்ற அச்சத்தில் விரைவாக அறுவடை செய்து மண்டிகளுக்கு அனுப்பும் பணியை  மேற்கொண்டு வருகின்றனர்.