உடுமலை, டிச.29- திருப்பூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கேலிச்சித்தி ரம் வரையும் போட்டியில் உடுமலை அரசுப்பள்ளி மாணவர் முதலிடம் பெற்றுள்ளார். திருப்பூரில் மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டி கள் நடைபெற்றது. இதில் உடுமலை அருகே உள்ள மலை யாண்டிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் ரா.ஹரிசுதன் கலந்து கொண்டு, கேலிச்சித்திரம் வரையும் போட்டியில் முதலிடம் பெற்றார். இதைத்தொடர்ந்து இவர் மாநிலப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவனை பள்ளி தலைமை ஆசிரியர் சதீஷ்குமார், ஓவிய ஆசிரியை மகேஸ் வரி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தவேணி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாண வர்கள் பாராட்டினர்.