தாராபுரம், டிச.7- தாராபுரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத் தில் காரில் பயணித்த கணவன் மனைவி உயிர் தப்பினர். திருப்பூர், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வ ரமூர்த்தி (62). இவரது மனைவி ஈஸ்வரி (53). இருவரும் தாராபு ரத்திலிருந்து திருப்பூரை நோக்கி தனது காரில் சென்று கொண் டிருந்தனர். அப்போது இடையன் கிணறு என்ற இடத்தில் காரின் அடிப்பகுதியிலிருந்து கரும்புகை வந்தது. இதனை கண்ட ஈஸ்வரமூர்த்தி காரிலிருந்து, இறங்கிய சில வினாடிக ளில் காரின் முன் பகுதி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதை யடுத்து அருகில் இருந்த கடைகாரர்களும், அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளும் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயர்ச்சி செய்தனர். ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத் தனர். தீயினால் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து கார் எத னால் தீ பற்றியது என விசாரணை நடத்தி வருகின்றனர்.