அவிநாசி,பிப்.25 அவிநாசி அருகே நகர்மன்ற தேர்தலில் திமுக மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், வெற்றி பெற்ற வேட்பா ளர்கள் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழகம் முழுவதும் அண்மையில் நடைபெற்ற நகர்ப் புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில், திருமுருகன்பூண்டி நகராட்சி, அன்னூர் பேரூராட்சி, அவிநாசி பேரூராட்சிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டி யிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள், நீலகிரி நாடாளு மன்ற உறுப்பினர் ஆ.ராசாவை சந்தித்து வாழ்த்து பெற்ற னர். அப்போது, திமுகவின் திருமுருகன்பூண்டி ஒன்றிய பொறுப்பாளர் பழனிச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பி னர் சரவணன் நம்பி, பாரதி குமார், சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் முத்து சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பி னர் வெங்கடாசலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் பேரூராட்சி தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் உடனிருந்த னர்.