districts

img

நீட் தேர்வை ரத்து செய்: மாணவர் சங்கம் போராட்டம்

சேலம், மார்ச் 23- நீட் தேர்வை ரத்து செய்ய வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வு விலக்கு கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உடனடியாக குடியர சுத் தலைவருக்கு தமிழக ஆளுநர் அனுப்பி வைக்க வேண்டும். கல் வியை ஒத்திசைவு பட்டியலிலிருந்து, மாநிலப் பட்டியலுக்கு மாற்றிட வேண் டும். அறிவியலுக்கு புறம்பான, மாண வர்களுக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும். அதற்கு ஏற்றவாறு தமிழக சட்டமன்றத்தில் நடப்பு கூட்டத்  தொடரிலேயே, புதிய கல்விக் கொள் கையை ரத்து செய்து சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலத்தில் இந்திய மாணவர் சங்கத்தி னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு மாதிரி சட்டமன்றம் அமைத்து நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் பவித் ரன் தலைமை வகித்தார். இதில், மாநி லத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாநகர செயலாளர் வி.அருண்குமார், மாநகர  துணைத் தலைவர் அரவிந்த், துணைச்  செயலாளர் டார்வின், மாநகரக் குழு  உறுப்பினர்கள் தினேஷ், டார்வின் உட் பட திரளானோர் கலந்து கொண்டனர். நிறைவாக, மாவட்ட செயற்குழு உறுப் பினர் முத்துக்குமரன் நன்றி கூறி னார்.