அவிநாசி, ஜன.9- அவிநாசி அருகே சேவூர் பகு தியில் நிகழ்ச்சி ஒன்றில் பங் கேற்ற, பாஜக ஒன்றிய அரசின் அமைச்சர் எல்.முருகன், பண் டிகை காலம் என்பதால் பொதுமக் களுக்கு சிரமம் ஏற்படாத வகை யில் போக்குவரத்து தொழிற்சங் கத்தினரிடம் மாநில அரசு கோரிக்கைகள் குறித்து விரைந்து பேசி தீர்வு காண வேண்டும் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். போக்குவரத்து தொழிலாளர்க ளின் கோரிக்கைகள் குறித்து அரசு சுமூகமாகப் பேசி நியாயமான தீர்வு காண வேண்டும் என்றே தொழிற்சங்கங்களும் கோரி வந் தன. வேறு வழியில்லாமல் போராட்டத்துக்குத் தள்ளப்பட்டுள் ளனர். இந்த சமயத்தில் தொழிலாளர் கள் மீதும், பொதுமக்கள் மீதும் கரிசனம் இருப்பது போல பாஜ கவைச் சேர்ந்த அமைச்சர் முரு கன் பேசியிருப்பது, வியப்பாக உள்ளது. பரவாயில்லை அமைச் சர் அக்கறையுடன் பேசியிருக்கி றார் என்று அப்பாவித்தனமாக சிலர் ஏமாறக்கூடும். ஆனால் அவர் அங்கம் வகிக் கும் மோடி அரசு இது போன்ற போராட்டக் காலத்தில் என்ன மாதிரியான அணுகுமுறையைக் கையாண்டது என்பதை நினைத் துப் பார்க்காமல் இருக்க முடிய வில்லை. குறிப்பாக எதேச்சதிகா ரமான முறையில் மூன்று வேளாண் சட்டங்களை திணித் தபோது, விவசாயிகள் வரலாறு காணாத மகத்தான போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அப்போது அவர்கள் போரா ட்டத்தை ஒடுக்க மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் வகையில் பல்வேறு இழிவான செயல்களை மோடி அரசு செய்தது. குறிப்பாக விவசாயிகளை டில்லிக்குள்ளேயே அனுமதிக்காமல் சாலைகளில் மிகப்பெரும் பள்ளங்களை வெட்டி வைத்தும், மிகப்பெரும் கான்கிரீட் தடுப்புகளை அடுக்கி வைத்தும், சாலைகளில் கான்கிரீட் இரும்பு கம்பிகளை முட்களைப் போல் நட்டு வைத்தும் அராஜகத்தில் ஈடு பட்டனர். நாட்டு மக்களுக்கு உணவு படைக்கும் விவசாயிகளை தேச துரோகிகள் என்று இழிவுப டுத்தினர். கடும் குளிர், மழை, கொடும் வெயில் என ஓராண் டுக்கும் மேலாக நடைபெற்ற இந்த வரலாற்றுப் போராட்டத்தில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழக் கும் நிலை ஏற்பட்டது. அப்போ தும் மோடி அரசு கருணை காட்ட வில்லை. அதற்கடுத்து வந்த உ.பி., தேர்தலில் தோற்றுப் போகக்கூடும் என்ற தகவல் வந்த வுடன்தான் வேண்டா வெறுப் பாக மூன்று சட்டங்களை வாபஸ் பெறுவதாக மோடி அறிவித் தார். அதன் பிறகும் விவசாயி களின் அடிப்ப டைக் கோரிக்கை களை, ஒப்புக் கொண்டபடி இதுவரை நிறைவேற் றவில்லை. மாறாக அதானி, அம் பானி போன்ற கார்ப்பரேட்டுக ளுக்கு ஆதரவான வேளாண் கொள்கைகளைக் கொள்ளைப்புற மாக நிறைவேற்றுவதற்கே இப் போதும் முயற்சி செய்து வரு கின்றனர். இந்த பாஜக அரசில் அங்கம் வகிக்கக்கூடிய அமைச்சர் முருகன் தான் இப்போது மாநில அரசுக்கு, பேசித் தீர்வு காண வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார். சாத் தான் வேதம் ஓதுகிறது என்ற சொல்லைத்தான் இது நினைவூட்டு கிறது. எனினும் விவசாயிகளானாலும் சரி, தொழிலாளர்களானாலும் சரி அவர்கள் தங்கள் உரிமையைக் காக்க தவிர்க்க முடியாமல் வர்க் கப் போராட்டம் நடத்தித்தான் தீர வேண்டும் என்பதைத்தான் அவர் களுக்கு அனுபவம் உணர்த்துகி றது. அதைத்தான் அப்போது விவ சாயிகள் செய்தார்கள். இப்போது தொழிலாளர்கள் செய்து வருகின்றனர்.