districts

img

பழைய பென்சன்‌ திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர் சந்திப்பு கோரிக்கை விளக்க பிரச்சார இயக்கம்

தருமபுரி, ஜூன் 20- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார் பில் ஊழியர் சந்திப்பு கோரிக்கை விளக்க  பிரச்சார இயக்கம் தருமபுரி மாவட்டம் ஒகே னக்கல்லில் துவங்கியது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து  பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊர்புற நூலகர்கள், எம்ஆர்பி செவிலியர் கள், கிராம உதவியாளர்கள், குழந்தைகள் பாதுகாப்பு திட்ட ஊழியர்கள் உள்ளிட்ட  அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட  ஊதியம் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு சட்டப்படியான ஓய்வூதியம் வழங்க வேண் டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறை வேற்ற கோரி, ஜூன் 20 ஆம் தேதி துவங்கி, ஜூன் 24 ஆம் தேதி வரை தமிழகம் முழு வதும் 7 முனைகளில் பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக தரு மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் இருந்து ஜூன் 20 அன்று பிரச்சாரம் துவங்கியது. இந்த பிரச்சாரத்திற்கு மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன் தலைமை தாங்கினார். மாவட்டசெயலாளர் ஏ.சேகர் வரவேற்றார். மாநில தலைவர் மு.அன்பரசு, மாநில துணை பொதுச் செயலாளர்கள் இரா.மங்க ளபாண்டியன், தெ.வாசுகி ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். கிருஷ்ணகிரி மாவட்ட தலை வர் சந்திரன், மாவட்ட செயலாளர் நடராஜன்,  தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் பி.எஸ்.இள வேணில், ஜெயவேல், சி.காவேரி, முனி ராஜ், குணசேகரன், அழகிரி, மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவ லர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஆர்.ஆறுமுகம், தமிழ்நாடு வருவாய்த் துறை ஊழியர் சங்க மாநிலசெயலாளர் எஸ். வெங்கடேஸ்வரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஒகேனக்கல்லில் துவங்கிய இந்த பிரச் சாரம், பென்னாகரம், பாலக்கோடு, அரூர்,  காரிமங்கலம்  ஆகிய இடங்களில்  வட்டாட்சி யர் அலுவலகம் முன்பும், பாப்பிரெட்பட்டி யில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பும்,  தருமபுரியில் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பும் நடைபெற்றது. இறுதியில், மாவட்ட பொருளாளர் கே.புகழேந்தி நன்றி  கூறினார்.