உடுமலை, மே 24- மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து உடுமலை யில் செவ்வாயன்று பிரச்சார இயக்கம் நடைபெற்றது. ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் இடது சாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் உடுமலையில் பிரச்சார இயக் கம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உடுமலை நகரச் செய லாளர் தண்டபாணி தலைமையில், எஸ்.வி.புரம் பகுதியில் தொடங்கிய பிரச்சாரம் உடுமலை காந்திசவுக் பகுதி யில் நிறைவு பெற்றது. இதில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மதுசூதணன், சுதா சுப்பிரமணியம், மாலினி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் உடுமலை தாலுகா செயலாளர் சௌந்தராஜன், ரணதேவ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், நக ரச் செயலாளர் ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.