districts

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

சிறுத்தை நடமாட்டத்தை அறிய கேமராக்கள் அமைப்பு

சேலம், ஆக.18- சேலம் அருகில் சிறுத்தை நடமாட்டத்தை அறிய 4  இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து வனத் துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.  சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த மூக்கனூர் பகுதியை  சேர்ந்த தொழிலாளி கோவிந்தராஜ். இவர், 5 வெள்ளாடு களை வைத்து அருகில் உள்ள பூசாரிப்பட்டி வைரன்காடு தேன்கல்கரடு பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். அப்படி மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளில் ஒன்றை காண வில்லை. மற்ற 4 ஆடுகளை தேடிச் சென்ற கோவிந்தராஜை விலங்கு ஒன்று துரத்தி உள்ளது. அந்த விலங்கிடம் இருந்து  கோவிந்தராஜ் தப்பி வந்தார்.  அந்த விலங்கு புதரில் பதுங்கி இருந்ததாகவும், அது  சிறுத்தையாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. தகவ லறிந்த டேனிஸ்பேட்டை வனச்சரக அலுவலர் தங்கராஜ் தலை மையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து  பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் காட்டு பகுதியில்  சுற்றி திரிந்த ஆடுகளை மீட்டு வனத்துறையினர் கோவிந்த ராஜிடம் ஒப்படைத்தனர். பூசாரிப்பட்டி பகுதியில் சிறுத்தை  நடமாட்டம் இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என  வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அப்பகுதி யில் 4 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப் பட்டுள்ளது. இந்நிலையில், வியாழனன்று மாலை வரை  கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் இருந்த தாக தெரியவில்லை என்று வனத்துறையினர் தெரிவித் தனர். அந்த பகுதியில் வேட்டை நாய்கள், காட்டு பூனைகள்  சுற்றி திரிந்ததற்கான அடையாளங்கள் உள்ளதாக தெரி கிறது. இருந்தாலும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என  வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.  அந்த பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம் எனவும், காட்டுப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல  வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத் துள்ளனர். 

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு பரிசல் இயக்க 3ஆவது நாளாக தடைவிதிப்பு

தருமபுரி, ஆக.18- ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து  அதிகரிப்பால், பரிசல் இயக்க 3ஆவது  நாளாக மாவட்ட நிர்வாகம் தடைவிதித் துள்ளது.  கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி யில் பெய்த மழையின் காரணமாக கிருஷ்ண  ராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து  அதிகரித்தது. இதனால் இந்த இரு அணை களில் இருந்து விநாடிக்கு 14 ஆயிரம் கன அடிக்கு மேல் தமிழக காவிரி ஆற்றில் திறக் கப்பட்டது. இந்த நீரானது கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. அதனைத்  தொடர்ந்து வியாழனன்று கர்நாடகா அணை களில் இருந்து மேலும் நீர்வரத்து அதிகரித்து  22 ஆயிரம் கன அடி உபரி நீர் தமிழகத் திற்கு திறந்து விடப்பட்டது. இந்த நீர் வரத்தால் ஒகேனக்கல் காவிரி  ஆற்றில் கடந்த இரு தினங்களாக நீர்வரத்து  படிப்படியாக அதிகரித்து 12,500 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து வெள்ளியன்று காலை 6 மணி நிலவரப்படி 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்து தண்ணீர் வந்தது.  இதையடுத்து நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவி களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் தமிழக - கர்நாடக மாநில எல்லை யான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்கா ணித்து வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து  அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகளின்  பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்க  3ஆவது (வெள்ளியன்று) நாளாக  மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.

பாதாளச்சாக்கடை: சிபிஎம் கோரிக்கை

திருப்பூர், ஆக.18- திருப்பூர் மாநகராட்சி வெள்ளியங்காடு கே.எம்.நகர் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்க ஆவண செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 52 ஆவது வார்டு கிளை சார்பில் மாநகராட்சி மேயரிடம் மனு அளிக்கப்பட்டது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளியன்று மேயரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, 52ஆவது வார்டுக்கு உட்பட்ட வெள்ளியங்காடு தெற்கு கே.எம் நகர் பகுதியில் உள்ள 8 வீதிகளிலும் தார்ச் சாலை அமைப்பதாக திருப்பூர் மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல பகுதிகளில்  பாதாளச்சாக்கடை மற்றும் சாலை அமைக் கப்படுகிறது. ஆனால் கே.எம்.நகர் பகுதியில் மட்டும் பாதாளச்சாக்கடை அமைக்காமல் தார்ச்சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் பாதாளச் சாக்கடை இல்லாமல் உள்ளது. எனவே, கே.எம்.நகர் பகுதிக்கும் பாதாள  சாக்கடை அமைக்க ஆவண செய்ய  வேண்டும் எனக் கூறபட்டுள்ளது.

விஜயா பதிப்பக விருதுகள் அறிவிப்பு

கோவை, ஆக.18- விஜயா பதிப்பகத்தின் சார்பில், ஜி.பாலாஜி, மோ.செந்தில் குமார் ஆகியோருக்கு கே.எஸ். மொழிபெயர்ப்பு விருதுகள் வழங்கப்பட உள்ளன. கோவையில் செயல்பட்டு வரும் விஜயா வாசகர் வட்டம், ஆண்டுதோறும் முனைவர் கே.சுப்பிரமணியன் பெயரால் இரண்டு மொழி பெயர்ப்பு விருதுகளை வழங்கி வருகி றது. தமிழிலிருந்து பிறமொழிகளுக்கும், பிறமொழியிலி ருந்து தமிழுக்கும் மொழிபெயர்க்கப்படும் சிறந்த படைப்பு களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், பரிசுக்கேடயமும் வழங்கப்படு கிறது. அந்தவகையில், 2023 ஆம் ஆண்டுக்கான கே.எஸ் விருது, தமிழிலிருந்து தெலுங்கு மொழிக்கு பல்வேறு சிறந்த  இலக்கியங்களை மொழி பெயர்த்த ஜி.பாலாஜி மற்றும் மலை யாளத்திலிருந்து தமிழுக்கு சிறந்த நூல்களை மொழி பெயர்த்த மோ.செந்தில்குமார் ஆகியோருக்கு வழங்கப்படள்ளது.

போராட்ட சுவரொட்டி கிழிப்பு: சிபிஎம் புகார்

நாமக்கல், ஆக.18- தனியார் காகித ஆலையை கண்டித்து ஒட்டப்பட்ட போராட்ட அறிவிப்பு சுவரொட்டி கிழிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பள்ளிபாளையம் ஒன் றியச் செயலாளர் ஆர்.ரவி. பள்ளிபாளையம் காவல் நிலை யத்தில் புகார் அளித்துள்ளார். அதில், பள்ளிபாளையத்தில் செயல்படும் தனியார் காகித ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையால் பொதுமக்கள் சொல்லொண்ணா பாதிப்பு களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, அதுகுறித்து உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆக.16 ஆம் தேதியன்று நடை பயணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, பள்ளிபாளை யம் சுற்றுவட்டார பகுதி முழுவதும் போராட்டம் குறித்த சுவ ரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இந்நிலையில், ஆக.15 ஆம் தேதியன்று இரவு சமூக விரோத நபர்கள் முன்விரோத எண் ணத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்ட அறி விப்பு சுவரொட்டிகள் முற்றிலுமாக கிழித்து வீசி உள்ளனர். எனவே, இதுகுறித்து காவல் துறையினர் சம்பந்தப்பட்ட நபர் கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

பட்டாசு வெடித்ததில் ஒருவர் பலி: குழந்தைகள் உட்பட 5 பேர் பேர் காயம்

தருமபுரி, ஆக.18- பாலக்கோடு அருகே கோவில் திருவிழாவின்போது, பட்டாசு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், மூன்று  குழந்தைகள் உட்பட 5 பேர் பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள வேளா வள்ளி கிராமத்திற்குட்பட்டது கருப்பாயிகொட்டாய் கிராமம். இக்கிராமத்தில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவில் திரு விழா நடைபெற்றது. திருவிழாவையொட்டி வான வேடிக்கை  வெடி விட்ட போது, பட்டாசு வைத்திருந்த மினி சரக்கு வாக னத்தில் எதிர்பாரதவிதமாக தீப்பொறி விழுந்ததில்  பட்டாசுக் கள் வெடித்து சிதறியது. இதில் கருப்பாயிகொட்டாயைச் சேர்ந்த விஜயகுமார் (21) என்ற வாலிபர் பரிதாபமாக உயிரி ழந்தார். மேலும், பரசுராமன் (27), யாசிகா (6), பிரதிக்சனா (7), தர்ஷன் (6), நாகராஜ் உட்பட 5 பேர் காயமடைந்து, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புலிக்குட்டிகள் இறப்பு 

உதகை, ஆக.18- கூடலூர் அருகே உள்ள  முதுமலை புலிகள் காப்பகம், 688 சதுர கிலோமீட்டர் பரப் பளவு கொண்டது. இங்கு  அதிகமான வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில், முது மலை புலிகள் காப்பகத்திற் குட்பட்ட சீகூர் வனச்சரகத் தில் உள்ள சிறியூர் வடக்கு வன பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்ற னர். அப்போது 2 புலிக்குட்டி கள் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. பிறந்து 2  வாரமே ஆன 2 புலிக்குட்டிக ளில் ஒன்றின் உடல் முழுவது மாக அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதுகுறித்து புலிகள் காப்பக உயர் அதி காரிகளுக்கு தகவல் தெரி விக்கபட்டது. அதன்பேரில் வெளிமண்டல துணை கள இயக்குநர் அருண், வனச்சர கர் தயாநந்தன் தலைமையி லான வனத்துறையினர் மற் றும் கால்நடை மருத்துவர் கள் இறந்த குட்டிகளின் உடல் களை பிரேத பரிசோதனை செய்தனர். அதன் அறிக்கை வந்தவுடன் தான் புலி குட்டி கள் இறந்ததற்கான முழு விப ரம் தெரியவரும் என வனத் துறையினர் தெரிவித்தனர்.

விடுதி கழிவறையில் கேமரா: ஊழியர் கைது

உதகை, ஆக.18- உதகை அருகே தனியார் தங்கும் விடுதி கழிவறையில் ரகசிய கேமார பொறுத்தி, பெண் களை வீடியோ எடுத்த தனியார் தங்கும் விடுதி ஊழியர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி பகுதி முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி  அமைந்திருப்பதனால் தினந்தோறும் ஆயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல் கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணி கள் தங்குவதற்காக மசினகுடி, ஆச்சக்கரை பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட தனியார் தங் கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந் நிலையில், ஆச்சக்கரை பகுதியில் உள்ள தனி யார் தங்கும் விடுதியில் கேரளா மாநிலம், கோழிகோட்டைச் தம்பதியினர், தங்கியுள்ள னர். அப்போது, அவர்களது அறையின் கழி வறையில் ரகசிய கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதனைத்தொடர்ந்து மசினகுடி காவல் நிலையத்தில் அத்தம்பதி யினர் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார்  நடத்திய விசாரணை மேற்கொண்டனர். இதை யடுத்து கழிவறையில் ரகசிய கேமரா பொறுத் தியதாக விடுதி ஊழியர் சிண்டு (22) என்பவர் மீது வழக்குப்பதிந்து, கைது செய்தனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

தருமபுரி, ஆக.18- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யு மாறு தமிழ்நாடு அரசு வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூயர்கள் சங்க மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வளர்ச்சி மற்றும் ஊராட் சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத் தின் மாநிலச் செயற்குழு கூட்டம் தருமபுரி நகர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு, மாநிலத் தலைவர் ச.ராம மூர்த்தி தலைமை வகித்தார். தருமபுரி மாவட்டத் தலைவர் கே.கேசவன் வரவேற் றார். இதில், மாநிலப் பொதுச்செயலாளர் பா. ரவி, மாநிலப் பொருளாளர் மு.மகாலிங்கம், மாநிலச் செயலாளர் பொ.மோகன்ராஜ், ஆகி யோர் அறிக்கையை சமர்ப்பித்தனர். இதன் பின் மாநில தணிக்கையாளராக வே.கிருஷ் ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக, பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியர் களுக்கான மருத்துவ செலவை முழுமை யாக காப்பீடு திட்டத்தின் மூலம் ஈடு செய்ய வேண்டும். ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளானவர்கள் மீது விசாரணை விரைவில் முடித்து ஓய்வூதிய பலன்களை வழங்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மேலும், தமிழ்நாடு அரசு வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதி யர்கள் சங்கத்தின் 3 ஆவது மாநில பிரதிநிதித் துவப் பேரவை செப்டம்பர் 23ஆம் தேதியன்று  திருச்சியில் நடத்துவது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

இன்று மின்தடை

நாமக்கல், ஆக.18- நாமக்கல், சேந்தமங்க லம் துணை மின்நிலையத் தில் சனியன்று (இன்று) பரா மரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் சேந்த மங்கலம், அக்கியம்பட்டி, கோனானூர், பேரமாவூர், கொண்டமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துக்காப் பட்டி, புதுக்கோம்பை, சிவ நாயக்கன்பட்டி, சாலப்பாளை யம், சிவியாம்பாளையம் ஆகிய பகுதிகளில் சனியன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோ கம் இருக்காது.