districts

img

அனைத்து கலை இலக்கியப் படைப்பாளிகளும் ஒன்று சேர வேண்டும்

திருப்பூர், மே 22- பண்பாட்டுத்தளத்தில் பிற் போக்கு சக்திகளின் தாக்குதலை எதிர்கொள்ள அனைத்து கலை இலக்கியப் படைப்பாளிகளும் ஓர ணியில் திரள வேண்டும் என்று  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநி லத் தலைவர் மதுக்கூர் ராமலிங் கம் அழைப்பு விடுத்துள்ளார். திருப்பூர் அண்ணா காலனி தியாகி பி.ராமசாமி நினைவு மண் டபத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தின் திருப்பூர் வடக்கு கிளை 15 ஆவது மாநாடு ஞாயிறன்று கிளை துணைத் தலைவர் டி.எம்.எல். ஆறுமுகம் தலைமையில் நடை பெற்றது. பா.ஜெயலட்சுமி வர வேற்றார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் மாநாட்டை துவக்கி வைத்து பேசி னார். வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் பொறியாளர் சு.ரவிக் குமார் இம்மாநாட்டை வாழ்த்திப் பேசினார். த.காளிதாஸ் வேலை அறிக்கையை முன்வைத்தார். வே.தூயவன் கலை பண்பாட்டு அறிக்கையை முன்வைத்தார்.

மாவட்டத் தலைவர் பி.ஆர்.கணே சன், மாநில செயற்குழு உறுப்பி னர் ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத் தின் வடக்கு கிளை தலைவராக டி.நாகராஜன், துணைத் தலைவர் களாக பா.ஜெயலட்சுமி, டி.எம். எல்.ஆறுமுகம், செயலாளராக த. காளிதாஸ், துணை செயலாளர்க ளாக பொன்.பாலகுமாரன், சந் தோஷ், பொருளாளராக மு.திருப் பதி உட்பட 16 பேர் கொண்ட நிர்வா கக்குழு தேர்வு செய்யப்பட்டது. புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்தும், படைப்பாளிகளை பாராட் டியும் மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் மாநாட்டு நிறைவுரை ஆற்றினார். அப்போது அவர் கூறுகையில், பண்பாட்டுத்தளத் தில் வகுப்புவாத சக்திகளின் தாக் குதல் அதிகரித்து வரக்கூடிய சூழ் நிலையில், மக்கள் பண்பாட்டை பாதுகாக்க முற்போக்கு கலை இலக்கிய படைப்பாளிகள் உள் ளிட்ட அனைத்து தரப்பினரையும் நாம் ஒன்று சேர்க்க வேண்டும் என்று கூறினார். முன்னதாக, கவிஞர்கள் பா. ராஜேஷ், பா.ஜெயலட்சுமி, விது ரன் சுரேஷ், மு.மனோன்மணி, சந் திராமணி ஆகியோர் கவிதை வாசித்தனர்.  பாடகர்கள் து.சோ. பிரபாகரன், அ.சந்தோஷ் ஆகி யோர் இசைப்பாடல் பாடினர். வள ரும் கலைஞர் வெ.பார்த்திபன் மிரு தங்கம் வாசித்தார்.

நூல் அறிமுகம்

தாண்டவக்கோன், ராம் ஆனந்த் ஆகியோர் நையாண்டி நாட கத்தை நடத்தினர். பத்திரிகையா ளர் தீபன் எழுதிய நாதியற்றவர் கள் சிறுகதை நூலை அறிமுகம் செய்து, ஆசிரியர் மணிகண்டபிரபு உரையாற்றினார். இம்மாநாட்டில் வடக்கு கிளைக்கு உட்பட்ட படைப்பாளிகள் கலை இலக்கிய ஆர்வலர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். நிறைவாக, பொருளாளர் மு.திருப்பதி நன்றி கூறினார்.